tag:blogger.com,1999:blog-83241672295003764652024-02-06T20:18:26.461-08:00ஆறுமுகம் அய்யாசாமிகருத்தும் கற்பனையும்ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-26194811026675792192016-01-24T07:42:00.000-08:002016-01-24T07:42:42.967-08:00கிணறு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
‘என்னை இந்த <a href="http://kinarumulagamum.blogspot.com/">கெணத்துல</a> புடிச்சுத் தள்ளிட்டாங்க’ என்று, என் மனைவியார் அடிக்கடி என்னைக்காட்டி, பெருமைப்படுத்திக் கூறுவது வழக்கம். ‘கெணறுண்ணா கெணறு, பாழுங்கெணறு’ என்று, உயர்வு நவிற்சியாக, அவர் இழுத்துச் சொல்வதைக் காணக் கண்கோடி வேண்டும்.<br />
கட்டிய மனைவியே, ‘பாழுங்கிணறு’ என்று பாராட்டும்போது, அதை மறுப்பது அவ்வளவு நியாயமாகவும் இருக்காது; தர்மமும் அல்ல என்கிற காரணத்தால், நானும் அதைப் பெருந்தன்மையோடு, மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.<br />
நான் தொடங்கிய வலைத்தளத்துக்கு,<a href="http://kinarumulagamum.blogspot.com/"> ‘கிணறு’</a> என்று பெயர் சூட்டியதற்கான காரணமும் இதுதான். தொடங்கிய காலத்தில், நம்மைப்போன்ற, பெருமைக்குரிய கிணறுகளை கண்டறிந்து, தோண்டித் துருவி எழுத வேண்டும் என்றொரு எண்ணமும் இருந்தது.<br />
சிறிது காலம், அந்த எண்ணமெல்லாம், கிணற்றுக்குள் போட்ட கல்லாகவே இருந்தது. நாட்கள் சென்று கொண்டே இருந்தன. ‘கிணற்றுத் தண்ணீரை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு போய் விடும்’ என்று நானும், தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.<br />
அப்புறம், சமீபத்தில் ஊருக்குள் பெய்த பெருமழையின்போதுதான், திடீர் ஞானோதயம் ஒன்று ஏற்பட்டது. அதாவது, எவ்வளவு காலம்தான் நாமும், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, இளங்கோவன் என்று உள்ளூர் அரசியல்வாதிகளைப் பற்றியே கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பது?<br />
உலக அளவில், ஒபாமா, கிளிண்டன், கேமரூன், பான் கீ மூன், புதின் என்று கருத்துச் சொன்னால்தானே, நமக்கும் தலைக்குப் பின்னால் ஒளி வட்டம் தோன்றும்?<br />
‘கிணற்றுத்தவளையாகவே இருந்து பழகிப்போய் விட்ட நாம், கொஞ்சம், உலக விவகாரங்கள் பற்றியெல்லாம் எழுதித்தான் பார்ப்போமே’ என்பதே, அந்த ஞானோதயத்தின் சாராம்சம்.<br />
அவ்வளவு தான். முடிவு எடுத்தாகி விட்டது. கண்டவை, கேட்டவை, படித்தவையுடன் கொஞ்சம் மசாலாவும் சேர்த்து, வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பதிவு எழுதி விடலாம் என்கிற நம்பிக்கையும் வந்தது.<br />
அப்படி எழுத ஆரம்பித்ததுதான், <a href="http://kinarumulagamum.blogspot.com/">கிணறு</a> வலைத்தளம்.<br />
ஏதோ, கொஞ்சம் பேர் படிக்கின்றனர். நமக்கும் பொழுது போகிறது. எப்படியோ, ‘<a href="http://kinarumulagamum.blogspot.com/">பாழும் கிணறு</a>’ என்று சொன்னவர்களுக்கு பாடம் புகட்டி விட்டோம் என்பதை எண்ணும்போது, உள்ளபடியே மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.<br />
‘தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு<br />
கற்றனைத் தூறும் அறிவு’ என்பதே, சமூகத்தின் இன்றைய தைப்பூச விடுமுறை தின கருத்து.</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-33746869741547380052016-01-13T20:17:00.002-08:002016-01-13T20:17:41.076-08:00இது, வாழைப்பழ தேசம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVmP9Fle3VUoBI5ovKV3AUPEnYCxVZIBPUBrEuVkB57aXWt9evHnb7FaoBhDMEH09tYl67c_RAWsH5ciRm9UUwD8wQnrWRVJuq4m4Tq7cJ5AGui216RWzumiAZfoUg-NdlfQSz44pVJivx/s1600/Madurai-alanganallur-jallikattu.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVmP9Fle3VUoBI5ovKV3AUPEnYCxVZIBPUBrEuVkB57aXWt9evHnb7FaoBhDMEH09tYl67c_RAWsH5ciRm9UUwD8wQnrWRVJuq4m4Tq7cJ5AGui216RWzumiAZfoUg-NdlfQSz44pVJivx/s320/Madurai-alanganallur-jallikattu.jpg" width="320" /></a></div>
நீதிமன்ற தீர்ப்பு முக்கியமா, மக்கள் உணர்வு முக்கியமா என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ‘மக்கள் எல்லோரும் சரியானவர்களாக இருந்தால், நீதிமன்றங்களே தேவையில்லையே’ என்று கேட்பதற்கு யாருக்கும் துப்பில்லாத இந்த துர்ப்பாக்கிய சூழலில், இந்தச்சமூகம் அது பற்றி கருத்துச் சொல்வது மிக அவசியமாகிறது.<br />
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத் தீர்ப்புகளை, கர்நாடகா அரசு மதிப்பதில்லை. பெரியாறு அணை தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை, கேரளா பின்பற்றுவதில்லை. இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போதெல்லாம், ‘நீதிமன்ற உத்தரவை, அந்த மாநிலம் மதிப்பதில்லை’ என்று, தமிழகத் தரப்பில் வாதம் முன் வைக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.<br />
‘எங்கள் மாநில விவசாயிகள் உணர்வுக்கு மதிப்பளித்து, காவிரியில் தண்ணீர் திறந்து விட மாட்டோம்’ என்று, கர்நாடக அரசு கூறிவிட்டால், நமது நிலை என்னவாக இருக்கும்? ஏற்கனவே, கர்நாடகா அரசு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. வெளிப்படையாக சொல்லும் நிலை வந்தால் என்ன செய்வது?<br />
பெரியாறு அணை விவகாரத்தில், எங்கள் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, புது அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் நிலையாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக, சட்டமன்றத்தை கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்றிய ‘பெருமை’ அம்மாநிலத்துக்கு உண்டு.<br />
இப்படி பிரச்னைகள் வரும்போதெல்லாம், அபயக்குரல் எழுப்பிய தமிழர்கள், இப்போது மட்டும், ‘மக்கள் உணர்வுதான் முக்கியம்’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பதை, என்னவென்று சொல்வது?<br />
‘நாட்டில் எந்த மாநில அரசும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லை; ஆகவே நாங்களும் மதிக்க மாட்டோம்’ என்று சொல்லி விட்டால், வாதம் கொஞ்சம் எடுபடுவது போலிருக்கும்; அப்புறம், கோர்ட்டில் நாயடி பேயடி கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்!</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-80883763115255144082015-12-20T09:20:00.003-08:002015-12-20T09:20:53.345-08:00ஆயிரம் ரூபாய் அக்கப்போர்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இது, யாரும், யாரையும் நம்பாத உலகம். ஆகவேதான், பணம் புழங்கும் நிறுவனங்களில் மட்டுமல்ல; பஸ், ரயிலில்கூட, கண்காணிப்பு கேமராக்கள் வந்து விட்டன. ‘நம்பிக்கை, அதுதானே வாழ்க்கை’ என்பதெல்லாம், வெற்று விளம்பரம் மட்டுமே என்பதை, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு விழித்துக் கொண்டு நிற்கும் கேமராக்கள், சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதாக, சமீப காலம் வரை நம்பிக் கொண்டிருந்தது சமூகம்.<br />
‘பார்த்தால் சங்கடப்படுவாரே’ என்றெண்ணி, மறைத்து வைத்திருக்கும் இயந்திரத்தில் ரூபாய் நோட்டின் உண்மைத்தன்மையை கடைக்காரர்கள் உறுதி செய்த காலம் மலையேறி விட்டது. நம் கண்களுக்கு முன்பாகவே, ரூபாய் நோட்டுக்களை உற்று உற்றுப் பார்த்து, ஒரு முறைக்கு இரு முறை இயந்திரத்தில் பரிசோதித்து வாங்கும் காலமிது.<br />
அப்பேர்ப்பட்ட சோதனைகள் பலவற்றை சந்தித்திருக்கும் சமூகம், பணத்தை பொறுத்தவரை, எதற்கும், யாரையும் நம்புவதில்லை என்பதை கொள்கையாகவே கொண்டிருந்தது. வங்கி கேஷியர்களை தவிர, வேறு எவரையும் நம்பக்கூடாது என்பதே, கொள்கையின் அடிப்படை. அதற்குரிய காரணங்கள் பலப்பல. அவற்றை நீட்டி முழக்குவது, தனக்குத்தானே தம்பட்டம் தட்டிக் கொள்வது போலாகும் என்கிறபடியால், தன்முனைப்புடன் அதைத் தவிர்க்கவே விரும்புகிறது, இந்த தற்பெருமையற்ற சமூகம்.<br />
அதற்காக, ‘கடன் கொடுப்பதும் இல்லை; வாங்குவதும் இல்லை’ என்பதான இரும்புத்திரை கொள்கைக்குள் சிக்கி சீரழிய விரும்பாத சமூகம், அதில் பாதியை மட்டும் ‘ரிலாக்ஸ்’ செய்து, அவ்வப்போது கடனும், கைமாற்றும் வாங்கிக் கொள்வதை வழக்கமாக்கி வைத்திருந்தது.<br />
அதாகப்பட்டது, ‘சமூகமே சிரமத்தில் சிங்கியடிக்கிறது’ என்பதாக, அவ்வப்போது ஏரியாவுக்குள் கருத்தொன்று, நிறுவப்பட்டு விடும் என்பதுவும், அதன் வாயிலாக, கடன் கேட்பாளர்கள் தொல்லை அவ்வளவாக இருக்காது என்பதுவும், கொள்கையை ‘ரிலாக்ஸ்’ செய்வதற்கான முக்கிய காரணிகள். பார்க்கும் யாரிடமும், சிரித்துச் சிரித்துப்பேசுவதையன்றி, வேறொன்றை அறியாத சமூகத்துக்கு, கொடுத்த கடனை திருப்பி வாங்கி விடுமளவுக்கு துப்பில்லை என்பது, கொள்கையில் பிடிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணி.<br />
சமூகம் அறிந்திருந்த வங்கி கேஷியர் ஒருவர், ஒரு முறைக்கு மூன்று முறை நோட்டுக்களை எண்ணி எண்ணிப் பார்ப்பார். கையில் தேய்த்துப் பரிசோதிப்பார். கண்களுக்கு அருகில் வைத்துப் பார்ப்பார். எந்திரத்தில் சரி பார்ப்பார். அப்படியொருமுறை சரிபார்த்தபோது, பொறுமையின் சிகரம் என்று பெயரெடுத்த சமூகத்துக்கே கொஞ்சம் கோபம் வந்து விட்டது. ஆனாலும், அதை சமூகம், சிரிப்பாகவே சிரித்து வெளிப்படுத்தியது.<br />
அதிலிருந்த நாகரிக நையாண்டியை நன்றாகவே புரிந்து கொண்ட கேஷியர், ‘யாரையும் நம்பக்கூடாதுங்குகிறதுதான், இந்த வேலைக்கு பால பாடம். நீங்கெல்லாம், இந்த வேலையில ஒரு நாள் உட்காந்து பாத்தாத்தான் தெரியும்’ என்று, ‘முதல்வன்’ படத்து ரகுவரனைப்போல் சொல்லி விட்டு, மீண்டுமொருமுறை எண்ணத் தொடங்கினார்.<br />
அதைக்கேட்டு கொஞ்சம், ‘ஜெர்க்’ ஆன சமூகம், ‘வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் கன்னத்தில் அறைபடுவதைப் போன்றதொரு ரியாக்ஷனைக் காட்டிவிட்டு, பின்வாங்கியது.<br />
சரி, சமூகத்துக்கு மனமாற்றம் ஏற்பட்டதற்கு காரணமான பிரச்னைக்கு வருவோம். மாத இறுதியை நோக்கிய வாரமொன்றில், அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு சமூகத்தின் கண்ணில் பட்டது. நோட்டு என்னவோ, நல்ல நோட்டுத்தான். ஆனால், ஓரத்தில் கொஞ்சம் கிழிந்து விட்டிருந்தது. கிழிந்த துண்டை வேறு காணோம். அய்யகோ! அது, எல்லாம் வல்ல சமூகத்தின் மனைவியின் கண்ணில்வேறு பட்டுத் தொலைத்து விட்டதே!<br />
அந்த வினாடியே அக்கப்போர் கிளம்பி விட்டது. ‘எப்படியாவது அந்த நோட்டுக்கு மாற்று நோட்டு, இன்றே வாங்கி வந்தாக வேண்டும்’ என்று உத்தரவு போட்டு விட்டார் சமூகத்தின் மனைவி. ‘எந்த வங்கிக்கு போய் வாங்குவது’ என்று, சமூகத்துக்கு வந்தது பெருங்குழப்பம்.<br />
கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. ‘ஏடிஎம்’ல் வந்த நோட்டுத்தான் என்றால், எந்த வங்கிக்கார மடையன், ‘ஆமாம், நாங்கள்தான் கிழிந்த நோட்டு, தெரியாமல் வைத்து விட்டோம்’ என்று ஏற்றுக்கொள்ளப் போகிறான் என்று, திருவிளையாடல் தருமி கணக்காக புலம்ப ஆரம்பித்தது சமூகம்.<br />
‘சரி, ஏதாவது ஒரு முயற்சி செய்து பார்ப்போமே’ என்று அந்த தனியார் வங்கிக்குள் பயந்து பயந்து போனது சமூகம். அங்கிருந்த பெண்மணிக்கு, சமூகத்தைப் பார்த்தவுடன் பாவம் பரிதாபமாக தோன்றியிருக்க வேண்டும்.<br />
‘எங்க ஏ.டிஎம்.ல, தவுசன்ஸ் வைக்கிறதில்லயே’ என்றபடி, பரிசோதிக்கும் கருவியில் ரூபாய் நோட்டை வைத்து, ஒரு முறைக்கு இரு முறை அம்மணி சோதித்து கொண்டிருந்தபோது, சமூகத்துக்கு இருதயம் நின்று விட்டது போலிருந்தது; சற்றே தொண்டையும் வறண்டு விட்டிருந்தது. வார்த்தைகளே வரவில்லை.<br />
‘இல்ல மேடம், வந்து, வந்து... இங்க தான் எடுத்த ஞாபகம்’ என்று, தட்டுத் தடுமாறிய சமூகத்தின் வார்த்தைகளை கேட்டு மனமிரங்கிய அம்மணி, ‘சரி பரவாயில்ல, நீங்க சொல்றீங்க, நான் நம்புறேன்’ என்று கூறி, நோட்டை மாற்றிக் கொடுத்து விட்டார்.<br />
அன்று, சமூகம் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே! ‘யாரையும், எப்போதும் நம்பக்கூடாது’ என்ற கொள்கைக்கு அன்றோடு முடிவு கட்டிய சமூகம், ‘ஆயிரம் ரூபாய் மாற்றிக் கொடுத்த அம்மணிக்காக, ஒரு மாமழை பெய்யட்டும்’ என்று வாயார வாழ்த்தி விடைபெற்றது.</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-53041101598582800902015-11-15T08:29:00.002-08:002015-11-15T08:29:52.067-08:00வந்ததே சோதனை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாட்டு நிலவரமே தெரியாமல், பல பேர், ஆர்வக்கோளாறில், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு கும்மியடிக்கிறார்கள். அதுவும், விடுமுறை நாளென்றால் கொண்டாட்டம் அளவில்லாமல் போய் விடுகிறது. அவர்களுக்கெல்லாம், ஊட்டியில் நடந்த கதை தெரியவில்லை போலிருக்கிறது.<br />
ஸ்டேட்டஸ் போட்டவரை, போலீஸ் பிடித்துக் கொண்டு போன நாள் முதலே, ஊருக்குள் ஒரே பீதியாக இருக்கிறது. தெரிந்தவர் என்பதற்காக, ‘என்ன ஸ்டேட்டஸ் போட்டார்’ என்றே படித்துப் பார்க்காமல், லைக் போட்டு விடுவதுதான், நம்மவர் பலருக்கு வழக்கம்.<br />
அப்படி லைக் போட்ட பல பேர், இப்போது, ‘போலீஸ் வந்து விடுமோ’ என்ற பீதியில் இருக்கிறார்களாம். இதில், சில பேர், அந்த வில்லங்க ஸ்டேட்டஸை ஷேர் செய்து விட்டார்களாம். அவர்களது நிலைமையெல்லாம் என்னவாகும் என்றே தெரியவில்லை.<br />
‘ஏதோ, என் புருஷனும் கச்சேரிக்குப் போனான்’ கதையாக பேஸ்புக்கில், காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் பல பேர், ‘இது, ஏதோ விவகாரம் போலிருக்கிறது’ என்று, கணக்கை க்ளோஸ் பண்ணுவது எப்படி என்று விசாரித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி.<br />
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் விட்டால், நமது டைம்லைனில் யாரேனும் வில்லங்கப் பேர்வழிகள், எதையாவது கொண்டு சேர்த்து விடும் அபாயம், நிறையவே உண்டு. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால், போலீஸ்காரர்கள் யாரைப்பிடிப்பார்கள் என்கிற சந்தேகம், சில நாட்களாகவே மண்டையை குடைகிறது.<br />
‘அடுத்தவர் டைம்லைனில் போட்டு விட்டவர் மீது தான் தவறு, அவரை மட்டும்தான் பிடிப்போம்’ என்றெல்லாம், நிச்சயமாக, எந்தப் போலீஸ்காரரும் சொல்ல வாய்ப்பில்லை. அதற்கெல்லாம் ஞானம் வேண்டுமே! ஆகவே, டைம்லைன் உரிமையாளர் நிச்சயம் குற்றவாளியாகவோ, குறைந்தபட்சம் சாட்சியாகவோ வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.<br />
இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து, நமது நிலைமை, தெனாலி படத்து கமலைப் போல் ஆகி விட்டது. எந்த ஸ்டேட்டஸை கண்டாலும் பயமாக இருக்கிறது. லைக் போடுவதற்கு முன்னதாக, மொக்கை ஸ்டேட்டஸ்களையும் விழுந்து விழுந்து படிக்க வேண்டியிருக்கிறது. ‘படித்துப் பார்த்தேன், சரி’ என்று எழுதி வைப்பது மட்டும் தான் பாக்கி.<br />
ட்விட்டரில், கண்டதையும் ரீட்வீட் செய்வதை வழக்கமாக வைத்திருந்த நமக்கு, இப்போது புத்தி தெளிந்திருக்கிறது. ‘கடவுள் நல்லவர்; அவர் நம்மைப்போன்ற அப்பாவிகளையும், நம்மைப் போன்றவர் டைம்லைன்களையும், வில்லங்கம் விவகாரங்களில் இருந்து நிச்சயம் காப்பாராக’ என்று வேண்டிக் கொண்டே, ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்ல வேண்டியிருக்கிறது. என்ன செய்வது, சத்திய சோதனை!</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-27230770079654027592015-05-27T22:27:00.000-07:002015-05-27T22:27:17.950-07:00மதிப்பற்றதா மதிப்பெண்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyOR1FSdOrZVDxXI43EMyLbNV0b3mwF6FpHtaC90UIsxfCG7y6yvfTc-nXDKCEUT-fCQxTI_6g4emMEH2OnhraijanqUGHqgw3smFPVb_XvkGsYL9a50PMsy23rED3Z6IP3v_LcxgPCrtC/s1600/SSLC_TOPPER_2412697f.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyOR1FSdOrZVDxXI43EMyLbNV0b3mwF6FpHtaC90UIsxfCG7y6yvfTc-nXDKCEUT-fCQxTI_6g4emMEH2OnhraijanqUGHqgw3smFPVb_XvkGsYL9a50PMsy23rED3Z6IP3v_LcxgPCrtC/s320/SSLC_TOPPER_2412697f.jpg" width="320" /></a>பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானவுடன் பதிவு போடலாம் என்று காத்திருந்தேன். ஆனால், தேர்வு முடிவு பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், அந்த எண்ணத்தை தடுத்து விட்டன. முடிவு வெளியான தினத்தில் சந்தித்த நண்பர் ஒருவர், ‘நீங்க வேணா விசாரியுங்க, யாராச்சும் நிச்சயமா 500க்கு மேல மார்க் வாங்கீருப்பாங்க’ என்றார். நக்கல்தான். ‘இந்த முறை மார்க் அள்ளிப் போட்டுட்டாங்க’ என்பது, பலரும் கூறும் கருத்தாக இருக்கிறது.<br />
தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏனோதானோவென இருப்பதாகவும், விடைத்தாள் திருத்தும் முறை சரியில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகி விடக்கூடாது என்ற கவலையில், எல்லோருக்கும் கூடுதலான மதிப்பெண் போட்டு தேர்ச்சி பெற வைப்பதாகவும், மதிப்பெண்களை, மதிப்பே இல்லாத வெற்று எண்களாக தேர்வு முடிவுகள் மாற்றி விட்டதாகவும், பல விதமான விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதிகப்படியான பேர், சென்டம் வாங்கியிருப்பதும் இத்தகைய கருத்துகளுக்கு வலுச் சேர்த்து விட்டது.<br />
மதிப்பெண் தாறுமாறாக அதிகரித்தமைக்கு, எனக்குத் தெரிந்த காரணம் ஒன்றுண்டு. அது, ஒரு தேர்வுக்கும், மற்றொரு தேர்வுக்குமான இடைவெளி. தமிழ் முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே நான்கு நாட்கள் விடுமுறை. அறிவியல் தேர்வுக்கு ஆறு நாட்கள்; சமூக அறிவியலுக்கும், கணிதத்துக்கும், தலா மூன்று நாட்கள். விடுமுறை இல்லாத தேர்வு, ஆங்கிலம் மட்டுமே.<br />
அறிவியலில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்டம் வாங்கியதற்கு, ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்ததும், 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தியதும் முக்கிய காரணங்கள்.<br />
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதும், மாணவர்கள் 499 மதிப்பெண் பெறுவதும், தமிழகத்தில் இதுவொன்றும் முதல் முறையல்ல; சில ஆண்டுகளாகவே இதே நிலைதான் இருந்து வருகிறது. மகனோ, மகளோ, என்ன வகுப்பில் படிக்கின்றனர் என்றே தெரியாமல் இருந்த தாய், தந்தையர் காலம் மலையேறி விட்டது. இப்போதைய பெற்றோர், ஆசிரியரின் குலம், கோத்திரம், குடும்ப விவகாரம் வரை தெரிந்து வைத்திருக்கின்றனர். கிராமத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் கூட, புளூபிரிண்ட்டும், வினா வங்கி புத்தகங்களும் வைத்துக் கொண்டு தேர்வுக்கு தயார் செய்கின்றனர்.<br />
பல அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள், தங்கள் கைக்காசை செலவழித்தும், ஸ்பான்சர் பிடித்தும், மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதை காண முடிகிறது. விளைவு, ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆகவே, ‘நான் படித்த காலத்தில் இப்படியெல்லாம் மதிப்பெண் போடவில்லையே’ என்று பேசுவதும், எழுதுவதும், சரியான ஒப்பீடாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.<br />
<br />
டெய்ல் பீஸ்: என் மூத்த மகள், 481 மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாள். மிகவும் சிரமப்பட்டு பயிற்சி செய்த கணிதத்தில் 92 மதிப்பெண்கள். இதையொட்டி நடத்தப்பட்ட ஒரு வார கால கொண்டாட்டங்கள் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளன.<br />
<br />
<a href="http://www.badriseshadri.in/2015/05/blog-post_25.html">தேர்வு முடிவு பற்றிய விலாவாரியான பார்வை:</a><br />
<a href="http://www.nisaptham.com/2015/05/499.html">மேலோட்டமான பார்வை:</a><br />
<br /></div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-34806355553315318442015-02-09T20:57:00.000-08:002015-02-09T20:57:16.482-08:00பலித்தது, கணிப்பாளர் கணக்கு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi81C4c0U422OWLuY_2MmYdHCXeJBkC2obX_cxfvB4xypOpjuxLhqwIzPLy7sIgNkJDlRxYI3TnAtubv2Q8Xcxrh6CasrIa6FwfFfVXYq_hewRS0wE0fagYLOe52uVRFdiUhaafOmCjOJZm/s1600/dHZIgF7u.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi81C4c0U422OWLuY_2MmYdHCXeJBkC2obX_cxfvB4xypOpjuxLhqwIzPLy7sIgNkJDlRxYI3TnAtubv2Q8Xcxrh6CasrIa6FwfFfVXYq_hewRS0wE0fagYLOe52uVRFdiUhaafOmCjOJZm/s1600/dHZIgF7u.jpeg" /></a>‘அரசியல் விஞ்ஞானி, அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் மிருகம்...’ என்கிறது, அவரது ட்விட்டர் தன் விவரக்குறிப்பு. அவர், யோகேந்திர யாதவ். டில்லித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, கெஜ்ரிவாலை தவிர்த்த பிற காரணங்களை பட்டியலிட்டுப் பாருங்கள்; அதில், முதலிடத்தில் யோகேந்திர யாதவ் பெயர் இருக்கும்.<br />
தேர்தல் கணிப்பாளராக ஒரு காலத்தில், ‘டிவி’ அரங்குகளில், மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த தாடிக்காரர் யோகேந்திரா, ஹரியானா மாநிலம், குர்கானை சேர்ந்தவர்.<br />
ஆம் ஆத்மியின் பின்னணியில் இவர் இருக்கும் விஷயத்தை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட முந்தைய காங்கிரஸ் அரசு, பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றியது.<br />
அதைப்பற்றி கவலைப்படாத யோகேந்திரா, ஆம் ஆத்மியில் நீடித்தார். முந்தைய டில்லி சட்டசபை தேர்தலிலும், தொடர்ந்த லோக்சபா தேர்தலிலும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.<br />
குர்கான் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தாலும், தேர்தல் அரசியலில் இருந்து அவர், ஓடிவிடவில்லை. மீண்டும் டில்லி தேர்தலுக்கான திட்டமிடுதலில் களம் இறங்கினார்.<br />
ஒரு சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்று வெளியான செய்திகளைப் பற்றிக்கூறிய அவர், ‘கருத்துக் கணிப்புகள் கூறும் இடங்களைக் காட்டிலும், எங்கள் கட்சி அதிக இடங்கள் பிடிக்கும். 57 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார். இப்போது வெளியாகி வரும் முடிவுகளைப் பார்த்தால், கணிப்பாளரின் கணக்கு பலித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!<br />
<div>
<br /></div>
</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-28564877527657104382015-02-08T08:14:00.003-08:002015-02-08T08:14:48.658-08:00இந்தா பிடி, சாபம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பொதுவாழ்க்கை, பொதுவாழ்க்கை என்று, மூச்சுக்கு முந்நூறு முறை, நாமெல்லாம் ஊருக்குள் உதார் விடும் இந்த அற்ப மானிடப்பிறவியில், அப்பாவிகள் சந்திக்கும் அவமானங்கள், எண்ணிலடங்காதவை. அவற்றில், அதிமுக்கியமானது, போலீஸ் சோதனை.<br />
இரவு நேரங்களில், டார்ச் விளக்கும், குண்டாந்தடியும் கைகளில் ஏந்தி, வாகனத்தை வழி மறிக்கும் அவர்களிடம், அன்னைத்தமிழின் அருமை பெருமைகளையும், பன்மை, ஒருமை விதிமுறைகளையும், இன்னபிற இலக்கண இலக்கிய சங்கதிகளையும் எதிர்பார்ப்பது, மனைவியானவள், ஞாயிற்றுக்கிழமை மூன்று வேளையும் சமைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதற்கு சமம்.<br />
சமூகத்துக்கு அப்படி பேராசை கிடையாது. நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் போதாதா? ஆகவே, இரவு நேரமெனில், போலீஸ்காரர்கள் வம்பிழுத்தாலும், பதில் பேசாமல், அமைதி காப்பதே சமூகத்தின் கொள்கை.<br />
ஆனால், பகல் நேரத்தில், அப்படியெல்லாம் எளிதில் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணாகதி அடைவதற்கு சமூகத்தின் மனம் ஒப்புவதில்லை. அதிலும், வீடு, அலுவலகம், பள்ளி, வீடு, அலுவலகம் என சுற்றிச்சுழல வேண்டிய, மதிய உணவுக்கும், மாலை காப்பிக்கும் இடையிலான சிறுபொழுது இருக்கிறதே! அப்பப்பா...! பெரும் சிக்கல்கள் நிறைந்தது; அவற்றைச் சமாளிப்பதற்கு, சமூகம் வைத்திருக்கும் ஹோண்டாவும், நோக்கியாவும் போதவே போதாது.<br />
அன்றொரு நாள், இளைய மகளை பள்ளியில் இருந்து, வீட்டில் கொண்டுசென்று விட்டு, சமூகம் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழக்கமானதொரு போலீஸ் சோதனை.<br />
பெண் போலீஸ் ஒருவர், ஒற்றைக் கையை மட்டும், ஸ்டைலாக காட்டி, வழிமறித்தார்.<br />
‘டாக்குமென்ட்ஸ் எடுங்க’ என்று உத்தரவு போட்டுவிட்டு, அடுத்த வண்டிக்கு கை காட்டப் போய் விட்டார். ‘வண்டியை தடுத்து நிறுத்துவது மட்டும்தான் அவருக்கு இடப்பட்ட வேலை போலும்’ என்றெண்ணிக் கொண்டது, சமூகம்.<br />
அன்றைக்குப் பார்த்து, அலுவலகத்தில் கொஞ்சம் அவசர வேலை. ஆகவே, சமூகம், வண்டியிலேயே உட்கார்ந்தபடி, டிரைவிங் லைசென்ஸை எடுத்து நீட்டிவிட்டது. <br />
நான்கடிக்கு அப்பால் நின்று கொண்டிருந்த போலீஸ்காரருக்கு, வீட்டில் சம்சாரத்துடன் ஏதோ பிரச்னை இருந்திருக்க வேண்டும்.<br />
‘ஏன், எறங்கி வர மாட்டீங்களோ’ என்று, சமூகத்தைப் பார்த்து, சுடச்சுட கேட்டு விட்டார். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு, மானம், அவமானம் பார்த்தால் முடியுமா? வண்டியை ஆஃப் செய்து, சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் நகல்களை கொண்டு சென்றது சமூகம்.<br />
வாங்கிப்பார்த்த போலீஸ்காரர், பொடி எழுத்தில் இருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எழுத்துக்கூட்டி, சிரமப்பட்டு படித்தார். அப்படியும் அவரால், பெயர் எங்கே, தேதி எங்கே என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை.<br />
‘எல்லாம் கரெக்டா இருக்குதா’ என்றார்.<br />
‘நீங்களே பாத்துக்கலாமே’ என்றது, சமூகம்.<br />
அவர் மனதுக்குள் திட்டிக் கொண்டே, இன்சூரன்ஸ் நகலை உற்று உற்றுப் பார்த்தார். அப்புறம், எதுவுமே பேசாமல், சமூகத்திடமே திருப்பிக் கொடுத்து விட்டார். போவென்றோ, இரு என்றோ, எதுவும் சொல்லவில்லை.<br />
‘சார், கரெக்டா இருக்குதா, நான் போலாமா’ என்றது, சமூகம்<br />
அவருக்கு, நக்கல் செய்வதாக, தோன்றியிருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தப்பக்கம் சென்று விட்டார். ‘போனால் போகட்டும்’ என்று, வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டது சமூகம்.<br />
அந்த வழித்தடத்தில், செயின் பறிப்பு அடிக்கடி நடக்கும். ஆகவேதான், 24 மணி நேரமும் போலீஸ் சோதனை நடந்து கொண்டே இருக்கிறது; திருடர்கள் தான் பிடிபட்டபாடில்லை.<br />
‘யாராவது ஏமாந்தவன் கிடைத்தால், வண்டியை விட்டு இறங்கி வரச்சொல்லும் போலீஸ்காரர்கள் இருக்கும்வரை, எந்த திருடனும் கிடைக்க மாட்டான்’ என்பதே, சமூகத்தின் இன்றைய கருத்து; இல்லையில்லை, சாபம்!</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-72145658407541031902015-01-05T08:17:00.001-08:002015-01-05T08:17:27.279-08:00எங்கே இருக்கிறது, சேவை?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேசிய நெடுஞ்சாலைகளில், முக்கிய சாலை சந்திப்புகளில், அவசர உதவிக்கென்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். சாலை விபத்துக்களில் சிக்குவோரை உடனுக்குடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி, உயிர் பிழைக்க வைப்பதற்கு அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது மிக மிகத்தவறு.<br />
இந்த ஆம்புலன்ஸ்கள் எல்லாம், தனியார் மருத்துவமனைகளின் மார்க்கெட்டிங் எந்திரங்கள். அணைகளுக்கு தண்ணீர் வரத்து அளிக்கக்கூடிய மலைப்பகுதியை, ‘கேட்ச்மெண்ட் ஏரியா’ அல்லது நீர்ப்பிடிப்பு பகுதி என்பார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு லட்சம் லட்சமாக கொட்டித்தரும் நோயாளிகளை அளிக்கக்கூடிய ‘கேட்ச்மெண்ட் ஏரியா’வாக, இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.<br />
மக்களுக்கு சேவை செய்வதாக, தனியார் மருத்துவமனைகள் போடும் வேஷத்துக்கு வசதியாகவே, இந்த ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப் படுகிறது. ‘சேவை’யை அனுபவித்தவர்களுக்குத்தான், அதன் சிரமம் புரியும்.<br />
சாலைகளில் விபத்து நடந்து விட்டால், இந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் புயல் வேகத்தில் போட்டி போட்டுக் கொண்டு வருவர். ‘ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் இவர்களுக்கு எத்தனை அக்கறை’ என்று மெச்சிக்கொள்ளும் வகையில் இருக்கும், அவர்கள் வேகம். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது. அடிபட்டவரை தங்களிடம் கொண்டு வரும் ஒவ்வொரு டிரைவருக்கும், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் மூவாயிரம் ரூபாய் வரை, கோவை மருத்துவமனைகள் கமிஷன் தருகின்றன.<br />
அடிபட்டவரை, சிகிச்சைக்கு அட்மிஷன் போட்டவுடனேயே, டிரைவர் கையில் பணம் தரப்பட்டு விடுகிறது. ஆகவே, சாலையில் எங்கு விபத்து நேரிட்டாலும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பறந்தடித்துக் கொண்டு வருவதும், ‘எந்த மருத்துவமனைக்கு போகலாம்’ என்று அடிபட்டவருக்கும், உடன் இருப்பவருக்கும் அறிவுரை, ஆலோசனை வழங்குவதும், அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்த மோசடிகளுக்கு இப்போதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் துணைபோவதாக புகார்கள் வரத் தொடங்கி விட்டன.<br />
அடிபட்டவர் அல்லது உடன் இருப்பவர், எந்த மருத்துவமனை போகச்சொல்கிறாரோ, அங்கு செல்ல வேண்டியதுதான் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கடமை. ஆனால், தனியார் மருத்துவமனைகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அத்தகைய நோக்கத்துடன் நடந்து கொள்வதில்லை. அடிபட்டவரிடம் இருந்து, தங்களுக்கோ, கமிஷன் தரும் மருத்துவமனைக்கோ, எதுவும் தேறாது என்று உறுதிப்படுத்திக் கொண்டபிறகே, அரசு மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாகி விட்டது.<br />
எனது உறவினர் ஒருவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் காலில் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக, அருகேயிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. வந்ததும், அந்த டிரைவர், குறிப்பிட்ட ஒரு தனியார் மருத்துவமனைக்கு போகலாம் என்கிறார். உறவினரோ, வேறு ஒரு மருத்துவமனைக்கு போகச்சொல்லியிருக்கிறார். டிரைவரோ, ‘நான் அந்த மருத்துவமனைக்குத்தான் போவேன்’ என்று குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரை கூறியிருக்கிறார்.<br />
‘அந்த மருத்துவமனைக்கு வந்து, ஒரே நிமிடம் இருந்து, வேறு மருத்துவமனைக்குப் போகிறேன் என்று கூறி விட்டுப் போய் விடுங்கள்’ என்கிறார், டிரைவர். காலில் எலும்பு முறிவுடன் துடித்துக் கொண்டிருந்த உறவினரோ, எரிச்சலாகி, ‘வேறு வண்டியை பிடியுங்கள்’ என்று கூறி விட்டார். அதன்பிறகுதான், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வழிக்கு வந்தார். இது, மூன்றாண்டுக்கு முன் கோவையில் நடந்த சம்பவம். இப்போது, இன்னும் நிலைமை மோசமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், மருத்துவமனைகள் தரும் கமிஷன் தவிர, வேறென்னவாக இருந்து விட முடியும்?<br />
‘இந்த கொள்ளையர்களும் இல்லாவிட்டால், விபத்தில் படுகாயமுற்று, சுய நினைவிழந்து கிடப்பவர்களை, காப்பதற்கு வேறு நாதியில்லை’ என்பதாலேயே, இவர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறென்ன செய்ய முடியும்?</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-79217240955632243282015-01-04T08:49:00.000-08:002015-01-04T08:49:44.824-08:00‘வசூல்’ வாரியம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பணியிட மாறுதலில் வெளியூர் சென்றபோது, ஏழாண்டுகள் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது. அடி முதல் முடி வரை, ஊழல் புரையோடியிருக்கும் அரசுத்துறைகளில் முக்கியமானது வீட்டு வசதி வாரியம்.<br />
அங்கு கோப்பு எதுவும், வைத்த இடத்தில் இருக்காது; கேட்ட நேரத்திலும் கிடைக்காது. ஒதுக்கீடெல்லாம், கடவுளே நினைத்தாலும் காசு தராமல் வாங்கி விட முடியாது. அலுவலகத்தில் நினைத்த இடத்தில் எல்லாம், குப்பை போல் கோப்புகள் கிடக்கும். குப்பை மலைகளுக்குள் ஆங்காங்கே பதுங்கிக் கொண்டு ஊழல் பெருச்சாளிகள் வேலை பார்க்கும். ஒரு அலுவலகத்துக்கு ஓரிருவர் நல்லவர் இருந்தாலே ஆச்சர்யம். அவர்களும் சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்க்காமலே நல்லவர்களாக இருந்து தொலைப்பர்.<br />
நான் அங்கு குடிபோனபோது, அக்கம் பக்கத்தில் இருந்த பலரும் கேட்ட முதல் கேள்வி, ‘அலாட்மென்ட் ஆர்டருக்கு எவ்வளவு கொடுத்தீங்க’ என்பதுதான். ‘நான் அரசு ஊழியர் அல்ல; பத்திரிகையாளர்’ என்பதைக் காட்டிலும், ‘லஞ்சம் கொடுக்காமல் அலாட்மென்ட் வாங்கிவிட்டேன்’ என்பதுதான் அவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.<br />
‘எங்கிட்டயே பத்தாயிரம் வாங்கிட்டான்’ என்றார், ஒரு வருவாய் ஆய்வாளர். ‘நான் அஞ்சாயிரம் கொடுத்துத்தான் ஆர்டர் வாங்கினேன்’ என்றார், ஒரு ஆசிரியர். பி.டி.ஓ., ஒருவரும், அவர்கள் இருவரையும் வழிமொழிந்தார்.<br />
இவர்கள் எல்லோரும் அரசு ஊழியர்கள். பத்தாண்டுகள், இருபதாண்டுகள் என அரசுத்துறைகளில் ஊறியவர்கள். அவர்களையே, பல முறை இழுத்தடித்து, பல ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டுதான், ‘அலாட்மென்ட் ஆர்டர்’ தரப்பட்டிருக்கிறது என்றால், எந்த அளவுக்கு வீட்டு வசதி வாரியத்தில் லஞ்சம் விளையாடும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.<br />
லஞ்சம் தராமல், வீடு அலாட்மென்ட், கீ ஆர்டர் எதுவும் வாங்க முடியாது. கேட்டால், ‘சீனியாரிட்டி லிஸ்ட் இருக்குது சார், அதன்படி தான் தர முடியும். எங்க வேணும்னாலும் சொல்லுங்க’ என்பார்கள். ‘கலெக்டரே சொன்னாலும் காரியம் நடக்காது; காசு கொடுத்தால் கைமேல் ஆர்டர் கிடைத்து விடும்’ என்பதுதான் நிதர்சனமான உண்மை. வாடகை குறைவு என்பது மட்டுமே, வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் ஒரே அனுகூலம்.<br />
அரசு ஊழியர் அல்லாதவர்கள், வீட்டு வாடகையை, கருவூல சலான் பூர்த்தி செய்து, பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டு வசதி வாரியத்தின் கணக்கில் செலுத்த வேண்டும். இப்படி செலுத்தும் சலான்களை, போட்டோ காப்பி எடுத்து, வீட்டு வசதி வாரியத்துக்கு அனுப்பிவிட வேண்டும். ஒரிஜினல் சலானை, நாம் பைல் செய்து வைத்துக்கொள்வது முக்கியம்.<br />
திடீர் திடீரென, ‘நீங்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை’ என்று கடிதமோ, போன் அழைப்போ வந்து விடும். நமக்கு வந்தால் பரவாயில்லை. அலுவலகத்துக்கு போனால் இன்னும் சிக்கல். ஆகவே, சலான் ஒரிஜினலை பத்திரமாக பைலில் வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது. கேட்கும்போது, அதையும் போட்டோ காப்பி எடுத்து அனுப்பி விட வேண்டும்.<br />
தீபாவளி பொங்கல் வரும்போது, சம்பந்தப்பட்ட செக்ஷன் ஊழியர் மகிழும் வண்ணம் ‘கவனித்து’ வைப்பது முக்கியம். இல்லையெனில், அவர்பாட்டுக்கு, ‘உங்கள் ஊழியர், வாடகை செலுத்தவில்லை’ என்று அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி விடுவார். அப்புறம், அக்னிப்பிரவேசம் செய்தாலும்கூட, நாம் யோக்கியர் என்பதை அலுவலகத்தில் யாரும் நம்பமாட்டார்கள். இந்த இம்சைக்கு பயந்தே, என் சக ஊழியர் ஒருவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தார், தீபாவளிக்கு வெளியிடும் ஸ்வீட் கூப்பனை, வீட்டு வசதி வாரிய ஊழியருக்கு தபாலில் அனுப்பி வைப்பார்.<br />
ஐந்தாறு இந்தியன் தாத்தாக்கள் அவதரித்து, தொடுவர்மம், தொடாவர்ம வித்தையெல்லாம் சரமாரியாக காட்டினால்தான், வீட்டு வசதி வாரியம் போன்ற அரசுத்துறைகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும் என்பதே, ஏழாண்டு அனுபவத்தில் நான் தெளிந்த உண்மை.</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-41451509687073546542015-01-03T21:33:00.000-08:002015-01-03T21:33:28.670-08:00மின் அலுவலகத்தில் ‘ஷாக்!’<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடைசி நாளில் கட்டணம் செலுத்தும் சராசரி இந்தியர்களின் வழக்கப்படி, மின் வாரிய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். நல்ல கூட்டம். நான்கைந்து வரிசைகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். பத்திரிகை செய்தியாளர் என்கிற தோரணையில், நேரே அதிகாரியை சந்தித்து, ஓரிரு வினாடிகளில் கட்டணம் செலுத்தி விடுவதற்கு, கொஞ்சம் திறமையும், நிறைய கொழுப்பும் வேண்டும். நம்மிடம் அதுவெல்லாம் கிடையாதென்பதால், ‘ஆனது ஆகட்டும்’ என வரிசையில் நின்று கொண்டேன்.<br />இப்படி காத்திருப்பதற்கு காரணம் இருக்கவே செய்கிறது. எந்த சூழ்நிலையிலும், வரிசைகளில் காத்திருப்போர் உலகம் தனித்துவம் கொண்டதாகவே இருக்கும். பஸ்சுக்கு, ரயிலுக்கு, விமான நிலைய பரிசோதனைக்கு, சினிமா டிக்கெட் வாங்குவதற்கு, வங்கிகளில், அரசின் பிற அலுவலகங்களில் என வரிசைகளும், காத்திருக்கும் மனிதர்களும் வேறுபடுவரே தவிர, அவர்களின் குணாதிசயங்களும், அடிக்கும் கமெண்ட்டுகளும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். <br />கட்டணம் வசூலிக்கும் நபர்களை, அவர்கள் பணியை, தங்கள் சொந்தக்கதையை, கிரிக்கெட்டை, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலும் பேசியபடி நின்றிருக்கும் மனிதர்களின் சுவாரஸ்யம் அத்தகையது. நமக்கும் பொழுதுபோக வேண்டுமல்லவா? ஆகவே, எங்கு சென்றாலும், வரிசை என்று வந்து விட்டால், புறமுதுகிட்டு ஓடாமல், விழுப்புண் விரும்பும் வீரனைப்போல், எதிர்கொண்டு சந்திப்பதே நம் தலையாய இயல்பு.<br />அப்படி சுமார் இரண்டு மணி நேரமாக காத்திருந்து, அக்கம் பக்கத்தில் நின்றவர்களின் சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் கேட்டபிறகு, எனது முறை வந்தது. கட்டண அட்டையுடன், பணத்தையும் நீட்டினேன். <br />கட்டணம் வசூலிக்கும் அலுவலர், அட்டையை, திருப்பித்திருப்பி பார்த்தார். <br />‘‘கடைசியாக எப்ப கரண்ட் பில் கட்டுனீங்க’’<br />என்னைப்பார்த்து கேட்டார்.<br />‘‘ரெண்டு மாசம் இருக்கும்,’’ என்றேன், நான்.<br />‘‘இல்ல, இந்த மாசத்துக்கு பில் கட்டுனீங்களா’’<br />‘‘இன்னிக்குத்தான லாஸ்ட் டேட், அதான் வந்துட்டனே’’<br />‘‘இல்லியே, இந்த நம்பருக்கு பில் கட்டியாச்சே’’<br />எனக்கு அதிர்ச்சி<br />‘‘சார், நம்பர நல்லா செக் பண்ணுங்க,’’ என்றேன்.<br />‘‘எல்லாம் பண்ணியாச்சு. இந்த நம்பருக்கு பில் கட்டீருக்கு’’<br />‘‘நான் கட்டவே இல்லியே’’<br />‘‘வீட்டுல வேற யாராச்சும் கட்டிருப்பாங்களா’’<br />‘‘இல்லியே, எங்க வீட்டுல ஊர்ல இருக்காங்ளே’’<br />‘‘சரி, நானெதுவும் பண்ண முடியாது. இந்தாங்க,’’ என்று, அட்டையுடன், பணத்தை திருப்பிக் கொடுத்தார்.<br />’’நல்லாப்பாருங்க, அப்புறம் கட்டலைன்னு சொல்லி, பீஸ் கேரியர புடுங்குறேன்னு வரக்கூடாதுங்க’’<br />‘‘சார், இது உங்க அட்டைதானே’’<br />‘‘ஆமா, எங்களுதுதான்’’<br />‘‘அப்படின்னா, இந்த அட்டைக்கு கரண்ட் பில் கட்டியாச்சு. நான் வேணும்னா அட்டைல என்ட்ரி போட்டுத்தாரேன்’’<br />சொன்னபடி என்ட்ரியும் போட்டுக்கொடுத்து விட்டார்.<br />எனக்கு அதிர்ச்சி குறைந்தபாடில்லை.<br />‘யார் கட்டியிருப்பார்’ என்று, யோசனையாக இருந்தேன். <br />எனக்குப்பின் வரிசையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் நமட்டுச்சிரிப்பு சிரிப்பது போல் இருந்தது. <br />‘‘சார், யாராச்சும் பணம் கட்டுனத, நம்பர் மாத்தி, உங்க நம்பருக்கு கட்டுனதா என்ட்ரி போட்டுருப்பாங்க, இவுங்க வேலைபாக்குற லட்சணம் தெரியாதா,’’ என்றார், ஒருவர்<br />இன்னொருவர், ‘அதான் என்ட்ரி போட்டுட்டாங்களே, தைரியமா போங்க சார்’ என்றார்.<br />வீட்டுக்கு சென்றபிறகும், குழப்பம் தீரவில்லை. <br />‘எதற்கும் கேட்டு வைப்போம்’ என்று ஊரில் இருக்கும் மனைவிக்கு போன் போட்டேன்.<br />‘‘கரண்ட் பில் ஏதாச்சும் கட்னியா’’<br />‘‘இல்லியே, அதெல்லா உங்கு டிபார்ட்மென்ட் தான’’<br />‘‘இல்ல, கரண்டுபில் கட்டப்போனா, அங்க இந்த நம்பர் ஏற்கனவே பில் கட்டியாச்சுன்னு சொல்லிட்டாங்க, அதான் குழப்பமா இருக்கு’’<br />‘‘நல்லப்பாத்திங்ளா, நம்மு நெம்பர்தானா’’<br />‘‘எல்லாம் செக் பண்ணியாச்சு, நம்மு நெம்பர்தான்னு சொல்லிட்டாங்க’’<br />‘‘செரி, பணம் மிச்சம்னு நெனைங்க’’<br />அதன்பிறகு, நானும் அதை மறந்து விட்டேன். அக்கம் பக்கத்து வீடுகளில் அனைவரும் அரசு ஊழியர்கள். அவர்களை பகல் நேரத்தில் சந்திப்பது அரிது. ஆகவே யாருடனும் அதைப்பற்றி பேசவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, கீழ் தளத்து வீட்டில் ஏதோ கலவரம் நடப்பது போன்று சத்தம் கேட்டது. என் மனைவி போய்ப்பார்த்துவிட்டு, சிரித்துக் கொண்டே வந்தார். <br />‘‘கரண்ட் பில் யாரோ கட்டிட்டாங்கன்னு சொன்னீங்களே, அது வாத்யார் சம்சாரம்தான். நம்பர் தெரியாம மாத்திச் சொல்லி பில் கட்டிருச்சாமா, பணம் கட்டுலன்னு சொல்லி, அவங்க வீட்டுல பீஸ் கேரியரை கழட்டீட்டு போய்ட்டாங்க’’<br />அபராதத்தை கட்டி, பீஸ் கேரியரை மீட்டு வந்தார், ஆசிரியர்.<br />நானும், என் மனைவியும், ஆசிரியரை சந்தித்து, நடந்த விவரத்தைக்கூறி, கட்டணத்தை கொடுத்து விட்டோம்.<br />ஆசிரியரின் மனைவி, ‘நான் நாலஞ்சு மாசமா, அந்த நம்பர்லதான் கரண்ட் பில் கட்றதா ஞாபகம்’ என்று கூற, எனக்குப் பகீரென்றது; பயந்து ஓடி வந்து விட்டோம்.<br /></div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-17530215363828289292014-12-31T18:11:00.001-08:002014-12-31T18:11:44.903-08:00விருது வாங்கலையோ விருது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />அரசியல் நிகழ்வுகளைப் பற்றி அடிக்கடி கருத்து சொல்லாமல் இருப்பதே புத்திசாலித்தனம். நம்மிடம் அதுவெல்லாம் கிடையாது என்பதாலும், கருத்து கந்தசாமிக்களின் எண்ணிக்கை நாட்டில் குறைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தாலும், நாமும் அவ்வப்போது எதுனாவது கருத்துச் சொல்லி, தமிழ் கூறும் நல்லுலகை வாழ்வித்து வருவது, எல்லோரும் அறிந்ததே. அந்த வகையில், இந்த கட்ஜூ, கட்ஜூ என்றொரு மகா வில்லங்க நீதிபதி இருக்கிறாரே, அவரது கருத்துக்களைப் பற்றி கருத்துச் சொல்லும் பேறு, இன்று நமக்கு வாய்த்திருக்கிறது.<br />கட்ஜூ, இப்போது நீதிபதியல்ல, ஓய்வு பெற்று விட்டார். பிரஸ் கவுன்சில் எனப்படும் வீணாய்ப்போன ஒரு அமைப்புக்கு, தலைவராகவும் இருந்தவர். இப்போது எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது. அது, அவர் வலைப்பக்கத்தை பார்த்தாலே தெரிந்து விடும். தினமும் மூன்று, நான்கு பதிவு போடுவதைப்பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது.<br />பாரத ரத்னா விருது வழங்குவதைப் பற்றி, வலைப்பக்கத்தில் கட்ஜூ எழுதியிருக்கிறார். ஏதோ, இப்போது மட்டும் தவறான நபர்களுக்கு விருது வழங்கப்போவது போலவும், முன்பெல்லாம் மிகச்சரியாக நடந்தது போலவும் இணையத்தில் கருத்துக்கள் உலா வருவது, வேடிக்கையாக இருக்கிறது. பாரதியாருக்கு, பாரத ரத்னா விருது தரப்பட வேண்டும் என்பதுவும், கட்ஜூவின் கருத்துக்களில் ஒன்று. ‘அதை, முந்தைய அரசும் கண்டுகொள்ளவில்லை; இப்போதைய அரசும் கண்டுகொள்ளவில்லை’ என்று, வருத்தப்படுகிறார் கட்ஜூ. இனி மேல், பாரதியாருக்கு விருது கொடுத்தால் என்ன, கொடுக்காவிட்டால் என்ன?<br />பாரத ரத்னா விருது இருக்கட்டும். தமிழக அரசின் புண்ணியத்தால், ஆண்டுக்கு ஆண்டு 50க்கும் மேற்பட்டோருக்கு, கலைமாமணி விருதுகள் கிடைக்கின்றன. <br />இது தவிர, கலை வளர்மணி, கலைமுதுமணி என்று, வயது வாரியாக வேறு விருதுகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் எப்படி ஆட்தேர்வு செய்கின்றனர் என்று விசாரித்துப் பார்த்தால், யாரும் விருதே வாங்க மாட்டார்கள்.<br />கலைமாமணி விருதுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்து அனுப்பி வைப்பார். கலெக்டருக்கு யார் பரிந்துரை செய்வார்? கலெக்டரின் பி.ஏ., கார் டிரைவர், டபாலி, அவரது மனைவி என்று யாராவது பரிந்துரை செய்யக்கூடும். கடைசியில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சில பேரைப்புகுத்துவார். அங்கும் யாராவது சில கழிசடைகளின் பரிந்துரை இருக்கும். சினிமா நடிகைகளை கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்வதில் நடக்கும் அக்கிரமம், வெளியில் சொல்ல முடியாதது. நல்லாசிரியர் விருதுக்கு, அந்தந்த மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களில் ‘பிளாட் ரேட்’ நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகளும், அவ்வப்போது சர்ச்சைகளால் கேவலப்படுத்தப்படுகின்றன.<br />பத்ம விருதுகள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், மாநில அரசுகளின் பரிந்துரைகளுக்கு உட்பட்டவை. அதிலும், நடிகர், நடிகையர் பெயர்கள் எப்படியோ இடம் பிடித்து விடுகின்றன. இதற்கெல்லாம், மத்திய அரசில் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றனர் என்ற விவரத்தை நானும் நீண்ட காலமாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன்; பிடிபட்டபாடில்லை. வெள்ளைப்பணத்துக்குள், கருப்புப்பணத்தை கலந்து விட்டு, கணக்குக் காட்டி விடும் கொள்ளையர்கள் போல், கழிசடைகள் பலரோடு, நல்லவர்கள் சிலருக்கும் விருது கொடுத்து, மொத்தக்கும்பலையும், உத்தமர்கள் ஆக்கி விடுகிறது, அரசு.<br />சினிமா பின்னணிப்பாடகி எஸ்.ஜானகிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, ‘எனக்கு பாரத ரத்னா தான் வேண்டும்’ என்று அவர், வெளிப்படையாகவே கூறி விட்டார். ‘தன்னை விட தகுதி குறைந்தவர்களுக்கு அந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு விட்டபோது, தனக்கு இவ்வளவு தாமதமாக விருது அறிவிப்பது தவறு. ஆகவே அந்த விருது போதாது’ என்பது அவர் கருத்து. நியாயம்தான்.<br />சரி போகட்டும். இப்படி விருதுகளை அறிவிப்பது சரி. கூடவே, விருதுக்கு விண்ணப்பித்தவர் யார், பரிந்துரைத்தவர் யார், ஒப்புதல் அளித்தவர் யார் என்ற விவரத்தையும், மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டால், எதிர்கால சந்ததிகள், படித்துப்பார்த்து, புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்பது நம் கருத்து.</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-74027057885406299262014-11-09T20:52:00.001-08:002014-11-09T20:52:26.932-08:00மார்க்கெட் மதிப்பும், வழிகாட்டி மதிப்பும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அரசு அறிவிக்கும் வளர்ச்சித்திட்டங்கள் பல, நிறைவேற்ற முடியாமல் முடங்கிப் போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, நிலம் எடுக்கும் விவகாரமே. அரசு நிலமாக இருந்தால் பிரச்னையில்லை. தனியார் நிலமாக இருந்தால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர்; வழக்கும் தொடுப்பர்.<br />
ஏதாவது வில்லங்கமான வக்கீல்களிடம் வழக்கு சென்று விட்டால், அந்த திட்டத்தின் கதி அதோகதி தான். தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் பாதை திட்டம், இப்படிப்பட்ட பிரச்னையில் சிக்கி, ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆனதை நான் அறிவேன்.<br />
தனியார் நிலத்தை அரசு எடுப்பதில் இருக்கும் சிக்கல்களை ஒரேயடியாக தீர்ப்பதற்கு, மத்திய அரசோ, மாநில அரசுகளோ தயாராக இல்லை. மாற்றி மாற்றி காலை வாரிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் அமைந்திருந்தால், எந்த ஒரு திட்டமும் விரைந்து நிறைவேற வாய்ப்பே இல்லை.<br />
தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில்கூட, நிலம் எடுப்பு பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்று. அதிகாரிகளை கேட்டுப்பாருங்கள்! ‘அரசாங்கம்தான், நிலத்தின் உரிமையாளர்; அதை வைத்திருப்பவர் பெயரில் பட்டா மட்டுமே தரப்படுகிறது. ஆகவே தன் நிலத்தை, தனக்குத் தேவையானபோது எடுக்க அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது’ என்று, விளக்கம் கொடுப்பர்.<br />
இப்படி ஊருக்குள் போய்ச்சொன்னால், தர்ம அடி விழுந்து விடும். அரசியல்வாதிகள் ஓட்டுக்கேட்க மட்டுமல்ல; ஓடி ஒளியவும் முடியாத நிலை ஏற்பட்டு விடும். டாட்டாவின் டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம், குப்பைக்குப் போனதை நாடு பார்த்ததே!<br />
ஆக, தமிழகத்தில் பாலங்கள் கட்டவோ, சாலை அமைக்கவோ, விரிவாக்கவோ, புதிதாக நிலம் எடுக்க முடியவில்லை. சென்னை, கோவை போன்ற இடங்களில் விமான நிலையங்களை விரிவாக்க முடியவில்லை.<br />
இப்போதுகூட, எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டம், விவசாயிகள் எதிர்ப்பால் முடங்கிக் கொண்டிருக்கிறது.<br />
‘இனி அரசு திட்டங்களுக்கு ஒரு இஞ்ச் கூட நிலம் எடுக்கவே முடியாது’ என்ற நிலை, தவிர்க்க முடியாததாகி விட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது, மார்க்கெட் மதிப்பு. மார்க்கெட் நிலவரப்படி, ஏக்கர் மூன்று கோடி போகும் நிலத்துக்கு, வழிகாட்டி மதிப்பு வெறும் பத்து லட்சத்துக்கும் கீழே இருக்கிறது.<br />
அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பை ஏற்க மறுப்பவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அந்த வழக்கு, ஓரிரு தலைமுறைகளில் முடிந்து விட்டால் பரவாயில்லை. முப்பது ஆண்டுக்கும் மேலாக நடக்கும் வழக்குகள், தமிழகத்தில் ஏராளம் இருக்கின்றன. பறிக்கப்பட்ட நிலத்துக்கு, தன் வாழ்நாளில் இழப்பீடே கிடைக்காமல் இறந்து போன விவசாயிகள் எத்தனையோ பேர். அரசுக்கு சொற்ப விலைக்கு நிலத்தைக் கொடுத்துவிட்ட சோகத்தில் இறந்தவர்களும், நடைபிணம் ஆனவர்களும் பலருண்டு.<br />
வழிகாட்டி மதிப்புக்கும், மார்க்கெட் மதிப்புக்கும் இருக்கும் மெகா இடைவெளிதான் அடிப்படை பிரச்னை. அதை சரி செய்து விட்டால், நிலம் எடுப்பு பிரச்னைகள் தீர்ந்து விடும். யாராவது தேவதூதர்கள் வான்வெளியில் பறந்து வந்தால்தான், இதுவெல்லாம் சாத்தியம்.</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-49785423480964849742014-11-04T18:39:00.003-08:002014-11-04T18:39:45.897-08:00ஆடு நனைகிறதாம்; அழுகிறது, ஓநாய்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFuPm77mxLc79pjUaV5AF5Xnv9rCWj1oYvdBTrc_lLf5VPfZheGN4sNteg0bA5ipGfvXh8zZl0PtO3jg50IdfPow7vguFnAuH06Rh_qruuVKzWnLRpVm7NlvRytVjnfBxe2LnmSfKcGXcD/s1600/1343925229_10270056-stethoscope-wholesale-from-wwwarsportasiacom.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFuPm77mxLc79pjUaV5AF5Xnv9rCWj1oYvdBTrc_lLf5VPfZheGN4sNteg0bA5ipGfvXh8zZl0PtO3jg50IdfPow7vguFnAuH06Rh_qruuVKzWnLRpVm7NlvRytVjnfBxe2LnmSfKcGXcD/s1600/1343925229_10270056-stethoscope-wholesale-from-wwwarsportasiacom.jpg" height="320" width="248" /></a>கோவையில் இருக்கிறது அந்த பிரபல மருத்துவமனை. அதன் தலைவர், நகைச்சுவையாக பேசக்கூடியவர். மருத்துவர் சங்க கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, சென்றிருந்தேன்.<br />
‘சிகிச்சைக்கு முன், நோயாளியின் கண்களுக்கு கடவுளாகத்தெரியும் மருத்துவர், நோய் குணமாகி விட்டால், சாதாரண மனிதராகி விடுவார். சிகிச்சைக்கான பில் தரப்படும்போது, சாதாரண மனிதர், சாத்தான் போலவே தெரிவார்’ என்றார், அவர். கூட்டத்தில் இருந்த மருத்துவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பு, கைத்தட்டல். காரணம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்ட அனுபவம் நிச்சயம் இருந்திருக்கும்.<br />
இப்போதெல்லாம், மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் கட்டணம், யாராலும் சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. சளி, காய்ச்சல் என்று போனால்கூட, குறைந்தபட்சம் முந்நூறு ரூபாய் செலவின்றி மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியாது.<br />
அதுவும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என்றால், குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயை தாண்டிவிடுகிறது. மருத்துவத் தொழில், மனிதர்களை கடந்து,<br />
பேராசைக்காரர்களையும் தாண்டி, கொள்ளைக்கூட்டத்தினரின் கைகளை அடைந்து விட்டிருக்கிறது.<br />
அன்றாடம் காய்ச்சிகள் மட்டுமல்ல; மாதச்சம்பளம் பெறுவோரும், மருந்துக் கடை நடத்துவோரைத்தான், தங்கள் குடும்ப மருத்துவராக பாவித்து, மாத்திரையும், ஆலோசனைகளும் பெற வேண்டியிருக்கிறது.<br />
சாதாரண சளிக்கு, முந்நூறு ரூபாய் வசூலிக்கும் மருத்துவரைக் காட்டிலும், பத்து ரூபாய் மாத்திரையில் தீர்வளிக்கும் மருந்துக்கடை ஊழியரே, இன்று பலருக்கு கடவுளாகத் தெரிகிறார்.<br />
மருத்துவர்கள், மருந்து நிறுவனத்தாரிடமும், ஆய்வகம் நடத்துவோரிடமும் கமிஷன் வாங்கிக்கொண்டு, நோயாளிகளுக்கு துரோகம் இழைக்கும் கொடுமை, உலக நடைமுறையாகி விட்டது.<br />
தங்கள் தொழிலுக்கு இடையூறு செய்யும் கம்பவுண்டர்களையும், மருந்துக் கடையினரையும், ‘போலி மருத்துவர்கள்’ என்று புகார் செய்து, போலீசில் சிக்க வைக்கும் மருத்துவர்களும் இருக்கின்றனர். மருத்துவர் சங்க கூட்டங்களில், அவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் இரண்டாகத்தான் இருக்கும்.<br />
ஒன்று, போலி மருத்துவர்கள் பிரச்னை; இன்னொன்று, சிகிச்சை சரியில்லை என்று நோயாளிகள் உறவினர்கள் மருத்துவமனையில் நேரடித்தாக்குதலில் இறங்குவது. போலி மருத்துவர்களால், அவர்களிடம் சிகிச்சைக்குச் செல்வோருக்குத்தான் பிரச்னை. இதில், ஒரிஜினல் மருத்துவர்களுக்கு கவலை என்ன வேண்டியிருக்கிறது? எல்லாம், ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுத கதை தான்.</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-28027384523178236192014-11-02T21:44:00.000-08:002014-11-02T21:44:17.831-08:00சென்சார்...நல்ல சென்சார்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சிங்காரச் சென்னை மாநகருக்கு முதல் முதலாக சென்றிருந்தேன். வேறெதற்கு? அலுவலகப்பணி தான். ஓட்டலில் சாப்பிட்டு முடித்தபின், கை கழுவச் சென்ற இடத்தில் ஒரு அதிசயம். முன் சென்ற நண்பர், கண்கள் அகல விரிய, ‘அட..., அட...’ என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தார்.<br />
‘சார், என்னாச்சு என்னாச்சு’ என்றேன். ‘இங்க பாருங்க’ என்றார். அவர் கை நீட்டிய இடத்தில் தண்ணீர் வரும் டேப் தான் இருந்தது. எனக்குப் புரியவில்லை. அவர், கை கழுவுவதுபோல், கையை அருகில் கொண்டு சென்றதுமே, டேப்பில் இருந்து தண்ணீர் குபுகுபுவென கொட்டியது.<br />
கையை அகற்றியும், தண்ணீர் நின்றது. மீண்டும் கையை அருகில் கொண்டு சென்றதும், தண்ணீர் கொட்டியது. இதெல்லாம், கிராமங்களில் இருந்து சென்றிருந்த நாங்கள், முன்னெப்போதும் கண்டே இராத, கேட்டும் இராத அதிசயம்.<br />
அதெப்படி? ‘நாம் கை கழுவ வருவதைப் பார்த்து, யாரோ டேப்பை திருகி தண்ணீரை திறந்து விடுகிறான்போல’ என்று சந்தேகம் வேறு. அப்புறம்தான் இன்னொரு நண்பர் சொன்னார், அதெல்லாம், ‘சென்சார்’ சம்பந்தப்பட்ட மேட்டர். கை அருகில் வருவதை ‘சென்சார்’ உணர்ந்தாலே, தண்ணீர் கொட்டுமென்று.<br />
இது நடந்து பல்லாண்டுகள் ஆனாலும், இன்னும் அந்த அதிர்ச்சியும், ஆச்சர்யமும் மனதை விட்டு அகலாமல் அப்படியே இருக்கின்றன.<br />
இப்போதெல்லாம், சிறு சிறு நகரங்களில் இருக்கும் ஓட்டல்களில் கூட சென்சார் பொருத்திய தண்ணீர் டேப் வைத்து விட்டார்கள். டாய்லெட்டுகளில் கூட, சென்சார்கள் பொருத்தப்பட்டு விட்டன.<br />
இத்தகைய பெருமைக்குரிய சென்சார்கள் பழுதாகி விட்டால் பண்ணும் இம்சை இருக்கிறதே! ஆளில்லாத நேரத்தில்கூட, தண்ணீரை குபுக் குபுக்கென கொட்டிக் கொண்டிருக்கும். தானே தண்ணீர் வந்து, தானே நிறுத்தி, மீண்டும் தானே வந்து, நின்று... ஐயோ...! கொஞ்சம் மனம் பலவீனமான நபர்கள், இப்படி நடப்பதைப் பார்த்து விட்டால், கூக்குரல் எழுப்பி, அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவர் தானே? </div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-50188464302642531272014-10-26T03:57:00.000-07:002014-10-26T03:57:07.791-07:00அமிலமாக மாறி விடும் கடல் நீர்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு, கடல் சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொழிற்துறையினர் உற்பத்தி செய்யும் கார்பன் டை ஆக்சைடில் மூன்றில் ஒரு பகுதி, கடலில் கலந்து விடுகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ9UJy7qAaxeohqTqk08cZyDPxzeJINDCS7joOAmIOCGcpIRYDNtZUv9KXDmZopICh8-6YUcwvCgQpzVTadWzowSfBQFK24F1xcEhGD0F6iKvg-S2VM0W-JYHwyztmY7cc6KfcJRQoL_Gq/s1600/_78487604_78487603.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQ9UJy7qAaxeohqTqk08cZyDPxzeJINDCS7joOAmIOCGcpIRYDNtZUv9KXDmZopICh8-6YUcwvCgQpzVTadWzowSfBQFK24F1xcEhGD0F6iKvg-S2VM0W-JYHwyztmY7cc6KfcJRQoL_Gq/s1600/_78487604_78487603.jpg" height="179" width="320" /></a></div>
இது, இயற்கையான வேதிப்பண்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, கடல் நீரை அமிலமாக மாற்றி விடுகிறது. இந்த அமிலமாக்கும் செயல், முந்தைய மதிப்பீடுகளை காட்டிலும் பல மடங்கு அதிகப்படியாக நடைபெற்றுள்ளதாக, தற்போதைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.<br />
இது குறித்து பிரிட்டனின் தலைமை விஞ்ஞானியான சர் மார்க் வால்போர்ட் கூறுகையில், ‘‘தொழிற்புரட்சிக் காலத்தில் இருந்ததை காட்டிலும், இப்போது 25 சதவீதம், கடல் நீரின் அமிலத்தன்மை அதிகரித்துள்ளது. இதற்கு மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடே காரணம்,’’ என்று தெரிவித்துள்ளார்.<br />
அவர் மேலும் கூறுகையில், ‘‘கடல் நீருடன் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு, வேதி வினை புரிந்து, கார்பானிக் அமிலமாக மாறி விடுகிறது. தற்போது வெளியேற்றப்படும் விகிதத்திலேயே கார்பன் டை ஆக்சைடு தொடர்ந்து வெளியேற்றப்பட்டால், கடல் நீரின் அமிலத்தன்மையும் தொடர்ந்து அதிகரிக்கும். இது, கடல் சுற்றுச்சூழலுக்கும், கடல் வாழ் தாவரங்கள், உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,’’ என்றார்.<br />
பல்வேறு காரணங்களால் கடல் நீர் வெப்பமாகி வருவதும், கடல் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. இத்தகைய பாதிப்பால், ‘எதிர்காலத்தில் கடலில் மீன் இனங்களே இல்லாத நிலை கூட ஏற்பட்டு விடும்’ என்றும், விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.<br />
http://www.bbc.com/news/science-environment-29746880<br />
<br /></div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-15923145547315021862014-10-21T22:43:00.001-07:002014-10-21T22:43:49.519-07:00தேர்தல் ஆணையமும், தேறாத பரிந்துரையும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேர்தலுக்கு தேர்தல், ‘பெய்டு நியூஸ்’ என்ற வார்த்தைப் பிரயோகம் ஊருக்குள் உலா வருவதைக் காண முடிகிறது. ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்’ என்கிறது சட்டம். அதுபோலத்தான், ‘பெய்டு நியூஸ்’ வெளியிடுவதும் குற்றம்; வெளியிட வைப்பதும் குற்றம்.<br />
‘எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும்’ என்பதற்காக, அரசியல்வாதிகளில் பெரும்பகுதியினர், இந்தக் குற்றத்தை விரும்பிச் செய்கின்றனர். பல் இல்லாப்பாம்புகள் கடித்தாலும் விஷமில்லை என்றான பிறகு, யாருக்குத்தான் பயமிருக்கும்? ஆகவே, தேர்தல்தோறும் ‘பெய்டு நியூஸ்’ சர்ச்சை கிளம்பிக் கொண்டே இருக்கிறது.<br />
பணம் வாங்கிக்கொண்டு, ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, இன்னொரு தரப்புக்கு எதிராகவோ வெளியிடப்படும் செய்திகளை, ‘பெய்டு நியூஸ்’ எனலாம். ‘வாங்கப்பட்ட செய்தி’ என்றோ, ‘விலைக்கு வாங்கிய செய்தி’ என்றோ தமிழில் குறிப்பிடுவது சரியாக இருக்கும்.<br />
நாடு முழுவதும் இலை மறை காயாக இருந்த ‘பெய்டு நியூஸ்’ விவகாரம், மகாராஷ்டிராவில் முந்தைய சட்டப்பேரவை தேர்தலின்போது, பூதாகரமாக வெடித்தது. முதல்வர் அசோக் சவானை புகழ்ந்து, வெவ்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகின. ஒரே செய்தி, ஒரு தலைப்பு. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருந்தது கட்டுரை. அதுவும், வெவ்வேறு நபர்கள் எழுதியதாக பெயருடன் இந்த கட்டுரைகள் வெளியாகின.<br />
இவை, பணம் கொடுத்து வெளியிடப்பட்டவை என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இது குறித்து ஆங்கிலப்பத்திரிகையில் செய்தி வெளியானதும், உறக்கத்தில் இருந்த தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டது; கொஞ்சம் விசாரித்தது. பிறகு அப்படியே விட்டு விட்டது.<br />
ஆதர்ஷ் அடுக்குமாடி திட்ட ஊழல் புகாரில்தான் அசோக் சவான் பதவி விலகினாரே தவிர, ‘பெய்டு நியூஸ்’ புகாரால் அவரை எதுவும் செய்து விட முடியவில்லை. விளைவு, அடுத்தடுத்த தேர்தல்களிலும் ‘பெய்டு நியூஸ்’ புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.<br />
இப்போது நடந்து முடிந்துள்ள ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்களில் கூட, ‘பெய்டு நியூஸ்’ வெளியிட்டதாக, 80 புகார்களை விசாரித்து, உறுதியும் செய்திருக்கிறது, தேர்தல் ஆணையம். அசோக் சவான் சிக்கிக் கொண்டதாலோ என்னவோ, இந்தமுறை மகாராஷ்டிராவில் வெறும் 13 புகார்கள் மட்டுமே உறுதியாகின. ஆனால், ஹரியானாவில் 67 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.<br />
இப்பிரச்னைக்கு தீர்வாக, ‘பணத்துக்கு செய்தி வெளியிடுவதை, தேர்தல் குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. இது தொடர்பான தங்கள் பரிந்துரை, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கவலைப்படுகிறார்.<br />
‘‘பெய்டு நியூஸ் தற்போது தேர்தல் குற்றமாக கருதப்படுவதில்லை. அதை தேர்தல் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சட்ட அமைச்சகத்துக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.<br />
‘‘அவ்வாறு தேர்தல் குற்றமாக கருதப்பட்டால், தவறு செய்யும் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும். ஆணையத்தின் பரிந்துரை, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால் எதுவும் செய்ய இயலவில்லை. தற்போதைய சூழ்நிலையில், தவறிழைத்தோர் மீதான நடவடிக்கை, சட்டத்தின் துணையின்றியே மேற்கொள்ளப்படுகிறது,’’ என்கிறார், சம்பத்.<br />
தேர்தல் குற்றமாக இருந்தால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது? அது ஒரு வகையில், கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போலத்தான். போகாத ஊருக்கு வழிகாட்டும் தேர்தல் ஆணையம், ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் தொலைக்காட்சிகளின் பங்கு குறித்து எந்த புகாரும் எழுப்புவதில்லை.<br />
நாட்டில் வெவ்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தொலைக்காட்சிகள் நடத்தப்படுகின்றன. கட்சி சார்பு தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகள், செய்தி போன்ற நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவான ஆட்களை மட்டும் வைத்து நடத்தப்படும் விவாதங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆணையம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.<br />
தனியார் எப்.எம்., ரேடியோக்களில் செய்தி வெளியிடுவதற்கு அனுமதியில்லை. உள்ளூர் சேனல்களுக்கும் இதே நிபந்தனைகள் உண்டு. ஆனால், நடப்பது என்ன? செய்தி என்ற பெயர்தான் இல்லையே தவிர, எப்.எம்., ரேடியோக்களிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் கட்சிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் நடக்கத்தான் செய்கின்றன.<br />
இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்குத் தேர்தல், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதாக பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறது. ஏதோ மின்னணு ஓட்டு இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டதால்தான், இந்திய தேர்தல் ஆணையர்கள், உலகளவில் பெருமை பேசித்திரிய முடிகிறது. இல்லையென்றால், இந்தியத் தேர்தல்கள் நடத்தப்படும் லட்சணம், நாட்டுக்கு நாடு நாறிக் கொண்டிருக்கும் என்பதே உண்மை. </div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-25618658706896046772014-10-05T11:11:00.001-07:002014-10-05T11:11:54.385-07:00பெருகுவது யார் வருவாய்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், வருவாயை பெருக்குவதாக சொல்லி, ஆங்காங்கே, கடைகள், வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பர். அவற்றில் ஒரு முறை, ஒருவர் வாடகைக்கு வந்து விட்டால் போதும், அதன்பிறகு அவர்தான் அந்த கடையின் உரிமையாளர் ஆகி விடுவார்.<br />
அவர் செத்துப் போனாலும், அவரது வாரிசுதாரர் வந்து உட்கார்ந்து விடுவார். அவரால் கடை நடத்த முடியவில்லை என்றால், வேறு யாருக்காவது கடையை விற்று விட்டுப் போய் விடுவார். அதெப்படி அரசு கட்டடத்தை, விற்க முடியும் என்றெல்லாம் கேட்கப்படாது. அது அப்படித்தான். <br />இரண்டு பேரும் பாகஸ்தர்களாக இருந்து தொழில் செய்தது போல், ஒரு ஒப்பந்தப் பத்திரம் ஒன்றை தயார் செய்து கொள்வர். பிறகு, 'இருவரும் தொழிலில் பிரிந்து விடுவோம், எனக்கு தொழில் செய்ய விருப்பமில்லை, வாடகைக்கு பிடித்த கடையை இனிமேல் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பிரிவினை பத்திரமும் தயார் செய்வர். அப்புறம் அந்தக்கடை புதியவருக்கு சொந்தமாகி விடும். அவருக்கு முடியவில்லை என்றால், அடுத்தவருக்கு வி்ற்பார். எல்லாம், முதலில் சொன்ன நடைமுறைதான். தமிழகம் முழுவதும் அரசு வணிக வளாகங்கள் எல்லாம் இப்படித்தான் சீரழிகின்றன.<br />ஒரு சம்பவம். நகராட்சி பஸ்ஸ்டாண்டில், ஒரு வணிக வளாகம் இருக்கிறது. அதில் தரை தளம், முதல் தளம் என இரண்டு தளங்கள் கொண்ட வணிக வளாகத்தை வாடகைக்கு எடுத்திருந்தவர், நொடிந்து போனார். அவரால் கடை நடத்த முடியவில்லை. பெரும் தொகைக்கு விற்று விட்டார். பத்தாண்டுக்கு முன்னாகவே, 60 லட்சம் என்றார்கள். நம்புங்கள், நகராட்சி கட்டடத்துக்குதான், இந்த விலை. நகராட்சியின் முக்கிய புள்ளிகளுக்கான கவனிப்புச் செலவு தனி.<br />அரசு வணிக வளாகங்களில் கடை வாடகைக்கு எடுப்பவர்களுக்கென்று ஆயிரம் விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அரசும் சரி, அதிகாரிகளும் சரி, பெரிதாக மதிப்பதில்லை. அவற்றில் இருக்கும் ஓட்டைகள் பலவற்றை அவர்கள் தானே, காட்டிக்கொடுக்கின்றனர்.<br />தரை தளத்தில் கடை நடத்தும் ஒருவர், பக்கத்து கடையை மேற்சொன்ன நடைமுறைப்படி கடையை விலைக்கு வாங்கி விட்டார். இப்போது இரு கடைகளையும் இணைத்தால்தான் அவருக்குப் பயன். நடுவில் சுவர் இருக்கிறது. அதை அகற்றி விட்டார். இது தரை தளம். அதன் சுவரை அகற்றினால், மேல் தளம் பாதிக்காதா? பாதிக்கும்தான். கட்டட உறுதித்தன்மை போய் விடும். பாதாளம் வரை பாயும் பணம், பக்கத்து கடை சுவர் இடிப்பதற்கு பாயாதா என்ன? இப்படிப்பட்ட பல வணிக வளாகங்கள், தமிழகம் முழுவதும் இருக்கின்றன.<br />கட்சிக்காரர் ஒருவர் சொன்னது நினைவில் இருக்கிறது. ''சார், நீங்க வேற, இப்பத்தான் பத்திரப்பதிவுல ரொம்ப உஷாரா இருக்காங்க. முன்னயெல்லாம், ஹைவேஸ் ரோட்டுல கடை வெக்குற உரிமைய 40 ஆயிரத்துக்கு வித்துட்டு, பத்திரம் பதிவு செஞ்சு கொடுத்த கதையெல்லாம் நடந்திருக்கு!''<br /><br /></div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-80354747350986629042014-07-06T23:49:00.000-07:002014-07-06T23:56:43.251-07:00யார் குற்றம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்றாடம் வெளியாகும் பத்திரிகை செய்திகளைப் பார்க்கும்போது, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர சம்பவங்கள், அதிகரித்து விட்டது நன்றாகவே தெரிகிறது. ‛மனித மனதின் அடி ஆழத்தில், ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடக்கும் வக்கிரம்தான் இதற்கெல்லாம் காரணம்’ என்கின்றனர், உளவியல் வல்லுநர்கள். <br />
மனதை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட மனிதன், வக்கிர எண்ணங்களை வெற்றி கொண்டு விடுகின்றான்; மனதை ஆளத் தெரியாத மனிதன், வக்கிரங்களுக்கு அடிமையாகி விடுகிறான். வக்கிர எண்ணங்கள், வகைதொகையற்றவை. அவற்றின் உந்துதலே, உலகின் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம். மது, அவற்றை உந்தி மேலெழுப்பி, ஊருக்குள் அனுப்பி விடுகிறது. விளைவுகளே, அன்றாடம், பத்திரிகை செய்திகளாக இடம் பெறுகின்றன.<br />
......<br />
கரூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கிராமம் அது. அதிகபட்சம் 100 வீடுகள் இருக்கும். சாலையோரம் சில டீக்கடைகள், பெட்டிக்கடைகளை தவிர வேறு பெரிதாக சொல்லிக் கொள்வதற்கு எதுவுமில்லாத ஊர் அது. <br />
இரவு 10 மணிக்கு மேலாகி விட்டால், அந்த ஊரில் போக்குவரத்து நெரிசல் தாறுமாறாக அதிகரித்து விடும். சில நேரங்களில், போலீசார் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிலைகூட ஏற்படுவதுண்டு. இப்படி பெரும்கூட்டம் கூடுவதால், இரவு ரோந்து போலீசாருக்கு, அங்கு செல்வது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.<br />
அந்த வழியில் வாகனம் இயக்கும் டிரைவர்கள், கிளீனர்கள், வாலிப, வயோதிக அன்பர்கள் அனைவருக்கும் அத்துபடியான கிராமம் அது. இரவுப்பணிக்காக தினமும் சேலம் சென்று திரும்பியபோதுதான், அந்த கிராமத்துக்கு இருக்கும் கிராக்கி, தெரியவந்தது.<br />
நான் பணி முடிந்து வீடு திரும்பும்போது, அதாவது அதிகாலை 2 மணிக்குக்கூட, அந்த கிராமத்தில் குறைந்தது 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், லாரிகள் நின்றிருக்கும். எதற்கு...? டீ குடிப்பதற்குத்தான்! அதுவும் குறிப்பிட்ட கடையில் மட்டுமே கூட்டம் இருக்கும். மற்ற கடைகளில் எல்லாம் ஈ, கொசு கூட இருக்காது; கடைக்காரர்கள் தூங்கி வழிந்து கொண்டிருப்பர். <br />
குறிப்பிட்ட இந்த கடையில் மட்டும், ‛நான்-ஸ்டாப்’ ஆக, டீ போடும் வேலை நடந்து கொண்டே இருக்கும். டீயில் ஏதேனும் விசேஷம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கத்தோன்றுமே? அதையும் சொல்லி விடுகிறேன். அதில் அப்படியொன்றும் சிறப்பில்லை. வழக்கமான கலப்படத்<br />
தூள்; விலையும் வழக்கமான விலைதான். வேறு என்னதான், ஸ்பெஷல்...?<br />
கடையில் கல்லாவில் இருக்கும் பெண் ஒருவர்தான், இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். அவர் ஒன்றும், மோசமானவர் அல்ல. அவரது பேச்சிலும், செய்கையிலும் யாரும் குறை கூற வாய்ப்பில்லை. <br />
கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கும் அவர், வாடிக்கையாளர்களிடம் சிரித்த முகத்துடன் பேசும் வழக்கம் கொண்டவர். அவரது அழகும், சிரிப்பும் தான், ஏராளமானோரை கடைக்கு கவர்ந்திழுக்கின்றன என்பது சில நாட்களிலேயே எனக்குப் புரிந்து விட்டது. ஆனால், கடைக்கு செல்பவர்களில் பெரும்பகுதியினர், அவரது சிரிப்புக்கும், பேச்சுக்கும்தான் செல்கின்றனர் என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க செய்தி. <br />
போலீசார் உட்பட அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும். கடையில் இருந்து வியாபாரம் செய்வதை யாராவது, தவறென்று சொல்ல முடியுமா? இப்படி டீக்கடையில் இருக்கும் பெண்ணுக்காக, பல் இளித்துக் கொண்டு திரியும் ஜொள்ளர்களால் எதுவும் அசம்பாவிதம் நேரிட்டு விடக்கூடாது என்பதற்காக, போலீசார் இரவு மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு.<br />
பிஞ்சுக் குழந்தையை கூட விட்டு வைக்காத கொடியவர்கள் சுற்றும் பூமியில், பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்கள், அதுவும் இரவு நேரத்தில் டீ குடிக்க வருவதெல்லாம் சாத்தியமா என்ன?<br />
<br />
<br /></div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-36198392388821009172014-07-03T00:08:00.003-07:002014-07-04T22:30:49.825-07:00சத்திய சோதனை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
‛நல்லவர்களை கடவுள் அடிக்கடி சோதிப்பார்’ என்பது நாமறிந்த ஒன்றுதான். அன்று காலை 6 மணிக்கெல்லாம், எனக்கு கடவுளின் சோதனை ஆரம்பமாகி விட்டது. உயர் அதிகாரி தொலைபேசியில் அழைத்தார்.<br />
‛‛ கோவிலுக்கு ஏழரை மணிக்கு வந்துடறேன். கொஞ்சம் வர முடியுமா?’’<br />
வேண்டுதல் தொனி இருந்தாலும், அது உத்தரவுதான். அதிகாரியாயிற்றே! அவசரம் அவசரமாக குளித்து, உடைமாற்றி, கோவிலுக்கு ஓடினேன். கோவில் அர்ச்சகர்களை தெரியாது. ‛மரியாதை எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரி முன் நம் மானம் <span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">போ</span>ய்விடும்’ என்று, படபடப்பாக இருந்தது.<br />
‛தெரிந்த முகங்கள் இருக்கின்றனரா’ என, தேடினேன். நல்ல வேளையாக, ஊழியர்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு, வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி, வணக்கம்போட்டு, குசலம் விசாரித்து, விஷயத்தை சொன்னேன்.<br />
‛அதுக்கென்ன சார், தாராளமா வரட்டும், சிறப்பா செஞ்சுருவோம்’ என்றார், கோவில் ஊழியர். லேசாக நிம்மதி வந்தது.<br />
கோவில் வாசலில் காத்திருந்தேன். அதிகாரி, காரில் வந்தார்.<br />
முன்கூட்டியே சிக்னல் தரப்பட்டிருந்தபடியால், கோவில் அர்ச்சகர்கள் இருவர் வந்து அதிகாரியை வரவேற்றனர். சன்னதி முன் உட்கார வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். அர்ச்சனை எல்லாம் செய்தாகி விட்டது. பரிவட்டம் கட்டி, மாலை மரியாதை செய்து, பிரசாதம் கொடுத்து, பெரிய கும்பிடுபோட்டு வழியனுப்பினர்.<br />
அதிகாரிக்கு மிக்க மகிழ்ச்சி. ‛வெரிகுட், வெரிகுட்’ என்று பாராட்டினார். ‛ கோவிலை ஒரு சுத்து சுத்திரட்டுமா’ என்று கேட்டபடி புறப்பட்டார். ‛எப்படியோ, மிக எளிதில் சமாளித்து விட்டோம்’ என்று எனக்கு உள்ளூர கொண்டாட்டம்.<br />
அதற்குள், கோவில் வாசலுக்கு கார் வந்து விட்டது. கார் கதவை திறந்து வைத்துக் கொண்டு, டிரைவர் காத்திருந்தார். கோவிலை சுற்றி வந்த அதிகாரி, எதையோ தேடிக் கொண்டிருந்தார். ‛ஏம்ப்பா, இங்கதான் விட்டிருந்தேன், காணமே’ என்றார். அவர் செருப்பைத்தேடுவதை, வினாடி நேரத்திலேயே புரிந்து கொண்டு விட்ட எனக்கு, நெஞ்சே வெடித்து விடும் <span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">போ</span>லிருந்தது.<br />
ஐயோ! பதற்றத்தில் அங்குமிங்கும் ஓடினேன், இல்லையில்லை தேடினேன். அதிகாரியும்தான். ஓரிரு நிமிடங்கள் தேடிய அதிகாரி, பின் சுதாரித்துக் கொண்டார். ‛சரி விடுப்பா, பழைய செருப்புதான், போகட்டும், கார்ல ஷூ இருக்கு’ என்றபடி, காருக்குள் ஏறிக் கொண்டார். ‛சரி வரட்டுமா’ என்று, அவர் கூறிச் சென்று இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகியும், எனக்கு சுய நினைவே இல்லை.<br />
கோவில் ஊழியர் வந்து கூப்பிட்டபோதுதான், நினைவு திரும்பியது. பெரும் அதிர்ச்சி. எல்லாவற்றையும் சிறப்பாக செய்து, செருப்பை கோட்டை விட்டு விட்டோமே! அதிகாரி கோபித்துக் கொள்வாரோ? கிலி பிடித்துக் கொண்டது. கோவில் ஊழியர், ‛‛சார், அதெல்லாம் எதுவும் நடக்காது. பகவான் மேல பாரத்தப்போட்டுருங்க சார்,’’ என்று ஆறுதலாக பேசினார்.<br />
‛‛சரி சார், காலங்காத்தால யாராச்சும் செருப்பு திருடுவாங்களா’’<br />
இது, எனது சந்தேகம்.<br />
‛‛சார், நீங்க தேங்கா, பழம், மாலை எல்லாம் இங்க கடைல வாங்குனா, செருப்புக்கு பங்கம் வராது. தேங்கா பழம் வாங்காமப்போனா<span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">லோ</span>, இல்ல பிச்சைக்காரங்களுக்கு பிச்சை போடாம போனாலோ, செருப்ப காணாமப் <span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">போ</span>க்கிடுவாங்க. இதுல கடைக்காரங்களும், <span style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">கோ</span>வில் வாசல்ல இருக்க பிச்சைக்காரங்களும் கூட்டு. இனியாவது உஷாரா இருந்துக்குங்க’’<br />
இன்று ஒரு தகவல் மாதிரி, அன்று ஒரு உண்மையை நான் புரிந்து கொண்டேன். எப்போது, எந்த கோவிலுக்கு போனாலும், செருப்பில்லாமல் போவதுதான், நமக்கும் நல்லது; பாக்கெட்டுக்கும் நல்லது; பாவம், பகவானுக்கும் நல்லது. பிறகு, நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்னைகளை தீர்க்கவே, பகவான் ஓவர்டைம் பார்க்க வேண்டியிருக்கும். இதில், நமது செருப்புக்கெல்லாமா, அவர் காவல் இருப்பார்?<br />
<br />
.....<br />
திருப்பூரில் 20 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் இது. அந்த நிறுவனத்துக்குப்பிறகு, மூன்று நிறுவனங்கள் மாறி வி்ட்டேன் . ஆனாலும், மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்தாலே, வியர்த்துக் கொட்டி விடும். கடவுளின் சோதனையல்லவா?</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-47356323815223735832013-12-19T22:07:00.000-08:002013-12-19T22:29:58.805-08:00குருவிக்கூட்டம் போனதெங்கே?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="entry-content" style="background-color: white; border: 0px; color: #111111; font-family: 'Century Schoolbook', Century, Garamond, serif; font-size: 2.4rem; font-style: italic; line-height: inherit; margin: 1.8em 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-size: 24px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin-bottom: 1.8em; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
என் வீட்டு முற்றத்தில்<br />
எதையோ தேடியது சிட்டுக்குருவி!<br />
அழுது திரிந்தபடி<br />
அங்குமிங்கும் ஓடியது<br />
‘அய்யோ அய்யோ’ என்றபடி<br />
அரற்றிப் புலம்பியது<br />
கூடு கட்ட இடம் தேடியதோ?<br />
குஞ்சுக்கு இரை தேடியதோ? </div>
<div style="border: 0px; font-family: inherit; font-size: 24px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin-bottom: 1.8em; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
முல்லைக்கொடி காணோம்!<br />
முயல் ஆடிய கூண்டும் காணோம்!<br />
ஆடு மேய்ந்த வெளியெல்லாம் </div>
<div style="border: 0px; font-family: inherit; font-size: 24px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin-bottom: 1.8em; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
அம்போன்னு கிடக்குறதே!<br />
ஆட்டாங்கல் தண்ணியெல்லாம்<br />
அப்படியே நிக்குறதே!<br />
குடிக்கவே யாருமில்லையோ? </div>
<div style="border: 0px; font-family: inherit; font-size: 24px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin-bottom: 1.8em; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
குருவிக்கூட்டம் போனதெங்கே?<br />
புல்வெளி வாசலிலே<br />
புழு பூச்சி தின்ற குருவி<br />
காரை வாசல் கண்டு<br />
கத்திக்கதறியது!<br />
‘குருவிகளே குருவிகளே’<br />
குரல் கொடுத்துக் கூப்பிட்டது!<br />
வருவார் யாருமில்லை<br />
வேதனையில் நின்ற குருவி </div>
<div style="border: 0px; font-family: inherit; font-size: 24px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin-bottom: 1.8em; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
விருட்டெனவே பறந்தது<br />
சாபம் கீபம் விட்டுடுமோ?<br />
சந்தேகம் வந்ததிப்போ<br />
குருவிக்கு கலரடிச்சு<br />
காதல் பேர்ல விக்குறததும்<br />
கறிக்கடைக்கு வறுவலுக்கு<br />
காசுக்கு விக்குறதும்<br />
ரொம்பவே தப்புத் தப்பு!<br />
திருந்துங்க மக்கு மக்கா!</div>
<div>
<br /></div>
<div class="sharedaddy sd-like-enabled sd-sharing-enabled" id="jp-post-flair" style="border-bottom-left-radius: 0px !important; border-bottom-right-radius: 0px !important; border-top-left-radius: 0px !important; border-top-right-radius: 0px !important; border: 0px; clear: both; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 12px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline; zoom: 1;">
</div>
</div>
</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-74467246644046404462013-12-19T22:05:00.002-08:002013-12-19T22:32:41.364-08:00அவசர உலகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="entry-content" style="background-color: white; border: 0px; color: #111111; font-family: 'Century Schoolbook', Century, Garamond, serif; font-size: 2.4rem; font-style: italic; line-height: inherit; margin: 1.8em 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-size: 24px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin-bottom: 1.8em; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
அலாரம் வைத்து<br />
விழிக்கும் உலகம்<br />
ஆட்டம் ஆடி<br />
ஓயும் உலகம்<br />
அவதியில் அம்மா<br />
ஆக்கிய சோறு<br />
ஆறப்பொறுக்கும்<br />
நேரமும் இல்லை<br />
அனுபவித்துண்ண<br />
வரமும் இல்லை<br />
அப்பா இருப்பார்<br />
அண்ணன் இருப்பான்<br />
தம்பி இருப்பான்<br />
தங்கையும் இருப்பாள்<br />
தனித்தனியே<br />
விடை கொடுக்க<br />
தடுமாறும் அவசர உலகம்…</div>
<div>
<br /></div>
<div class="sharedaddy sd-like-enabled sd-sharing-enabled" id="jp-post-flair" style="border-bottom-left-radius: 0px !important; border-bottom-right-radius: 0px !important; border-top-left-radius: 0px !important; border-top-right-radius: 0px !important; border: 0px; clear: both; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 12px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline; zoom: 1;">
</div>
</div>
</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-75894794165449283892013-12-19T22:04:00.002-08:002013-12-19T22:31:48.015-08:00மரமெல்லாம் மரம் அல்ல!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="entry-content" style="background-color: white; border: 0px; color: #111111; font-family: 'Century Schoolbook', Century, Garamond, serif; font-size: 19px; line-height: 34px; margin: 1.8em 0px 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மரமெல்லாம் மரம் அல்ல;</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மனுச உசிராட்டம்!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
ஆராச்சி பல செஞ்சு</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
ஆமான்னு கண்டாங்க!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
இதுக்கெதுக்கு ஆராச்சி</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
இருக்குறாங்க பல சாட்சி!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
எங்கூட்டு வாசல் தான்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
எல்லாத்துக்கும் கண்சாட்சி!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
வெளியூரு வேலைக்கு நான்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
வெடிஞ்சதுமே போகையில</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
வழியனுப்பி வெச்சதொரு</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
வாசமில்லா சிறு நாத்து!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மாசம் பல முடிஞ்சு</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மத்தியானம் வந்தப்போ</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மணமணக்கும் பூ மரம் தான்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
எனக்கான வரவேற்பு!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
சமஞ்ச பொண்ணாட்டம்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
சடசடன்னு வளந்துடுச்சு</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
செம்பகப்பூ மரமா?</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
நம்பவே முடியலியே!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
அய்யன் அம்மாளுக்கு</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
அப்புடியொரு சந்தோசம்!<br />
–</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin-bottom: 1.8em; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மத்த மரமெல்லாம்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மழ வெய்யத்தாங்காது!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
பருவம் தெச மாறி</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
பனி பேஞ்சாப்பூக்காது!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மகனாக வந்த மரம்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மாசமெல்லாம் பூப்பூக்கும்!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மண்ணுல வளந்தாலும்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
கண்ணுக்குள்ள வளந்த மரம்!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
கலகலன்னு சிரிச்சாப்புல</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
காத்தால பூக்கும் மரம்!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
ஊடு மட்டுமல்ல</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
ஊரெல்லாம் மணந்த மரம்!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மாசமாசம் வருகையில</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மரந்தானே வரவேற்கும்!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மரமெல்லாம் மரம் அல்ல;</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
மனுச உசிராட்டம்!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
”அய்யன் அம்மாள</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
அலுங்காம காப்பாத்த</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
தம்பி நானிருக்கேன்;</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
தயங்காம நீ கெளம்பு”</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
வாசல்ல நின்ன மரம்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
வழியனுப்பி வச்சதென்ன!</div>
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
”காத்தால போகோணுமா</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
காப்பியாச்சும் குடியண்ணா!”</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
”அண்ணிக்கு நல்லாருக்கா</div>
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
கொடம் எடுத்தா ஆகாதே!”</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
”பரிச்ச லீவுக்காச்சும்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
பாப்பாள கூட்டி வாண்ணா!”</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
பாசத்த தோக்கடிச்ச</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
பச்ச மர உத்தரவு!</div>
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
காத்துல காத்தாடி</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
கருசனையாப் பேசும் மரம்!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
குடும்பத்தோட வந்தப்போ</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
காஞ்சு தான் போனதப்பா!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
அசலூரு போன மகன்</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
அங்கருந்து வந்துட்டானே!</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
கடம முடிஞ்சதுன்னு</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
கண்ண மூடிடுச்சோ?</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
தெரிஞ்சா சொல்லுங்களே</div>
<div style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">
தேன் சிட்டுக் குருவிகளே!</div>
<div>
<br /></div>
</div>
</div>
</div>
<div class="sharedaddy sd-like-enabled sd-sharing-enabled" id="jp-post-flair" style="border-bottom-left-radius: 0px !important; border-bottom-right-radius: 0px !important; border-top-left-radius: 0px !important; border-top-right-radius: 0px !important; border: 0px; clear: both; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 12px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline; zoom: 1;">
</div>
</div>
</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-75196401612198750422013-12-19T22:03:00.000-08:002013-12-19T22:30:36.555-08:00சபாஷ் போட்டது நாய்க்குட்டி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="wpcnt" id="wordads-preview-parent" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; border: 0px; color: #111111; font-family: 'Century Schoolbook', Century, Garamond, serif; font-size: 24px; font-style: italic; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 0; margin: 0px; orphans: auto; outline: 0px; padding: 0px; text-align: center; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div class="wpa" style="border: 0px; display: inline-block; font-family: inherit; font-size: 24px; font-style: inherit; font-weight: inherit; margin: 0px; max-width: 100%; outline: 0px; overflow: hidden; padding: 0px; position: relative; vertical-align: baseline;">
</div>
</div>
<br />
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; border: 0px; color: #111111; font-family: 'Century Schoolbook', Century, Garamond, serif; font-size: 24px; font-style: italic; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 43px; margin: 0px 0px 1.8em; orphans: auto; outline: 0px; padding: 0px; text-align: start; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
காக்கை குருவிக்கெல்லாம்<br />
கவிதை எழுதுகிறாய்!<br />
கடைக்குட்டி பாப்பாவுக்கும்; எனை<br />
கட்டி வைக்கும் அக்காவுக்கும்<br />
கவிதை எழுதி விட்டாய்!<br />
கடும் குளிரில் வெறும் தரையில்<br />
காவல் இருக்கின்றேன்;<br />
கண்மூடி போகின்றாய்!<br />
வாலை ஆட்டிக்கொண்டே<br />
வழிமறித்தது நாய்க்குட்டி<br />
வருத்தமாய் இருப்பது போல்<br />
குரைத்தது காலைக் கட்டி<br />
‘உனக்கும் ஒரு கவிதை<br />
எழுதித்தான் விடுகின்றேன்’<br />
என்றே தான் சொல்லி<br />
தப்பித்து நான் வந்தேன்<br />
‘காலம் முழுவதும் காவல்காரன்’<br />
‘காப்பி, டீ கேட்காத வேலைக்காரன்’ </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; border: 0px; color: #111111; font-family: 'Century Schoolbook', Century, Garamond, serif; font-size: 24px; font-style: italic; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 43px; margin: 0px 0px 1.8em; orphans: auto; outline: 0px; padding: 0px; text-align: start; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
‘சம்பளம் இல்லை; போனஸ் இல்லை </div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; border: 0px; color: #111111; font-family: 'Century Schoolbook', Century, Garamond, serif; font-size: 24px; font-style: italic; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 43px; margin: 0px 0px 1.8em; orphans: auto; outline: 0px; padding: 0px; text-align: start; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
சட்டம் பேசாத சாகசக்காரன்’</div>
<div style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; border: 0px; color: #111111; font-family: 'Century Schoolbook', Century, Garamond, serif; font-size: 24px; font-style: italic; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 43px; margin: 0px 0px 1.8em; orphans: auto; outline: 0px; padding: 0px; text-align: start; text-indent: 0px; text-transform: none; vertical-align: baseline; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
சிரிப்புடனே நான்<br />
சொல்லக்கேட்டதும்<br />
‘சரிதான், சரிதான்’ என்றபடி<br />
சபாஷ் போட்டது நாய்க்குட்டி!</div>
</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-54844007421294822642013-12-14T03:11:00.001-08:002013-12-19T22:33:21.520-08:00தம்பி…சாவி பத்திரம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; border: 0px; color: #373737; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 1.625em; outline: 0px; padding: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;">
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தனக்கேயென அடைய விரும்பும் அதிசயப் பொருள், சாவி. அவரவர் வசதியைப் பொறுத்து, அது வீட்டுச் சாவி, வண்டிச்சாவி, பீரோ சாவி, கொத்துச்சாவி என வேறுபடலாம்.<br />
சாவியின் வல்லமை அசாத்தியமானது. குடும்பங்களை உடைக்கும்; கூட்டாளிகளை பிரிக்கும். சாவியின் வரலாறு, சதிகளையும், சங்கடங்களையும்தான் அதிகமாய் நினைவு படுத்துவதாய் இருக்கிறது.<br />
சாவியை மறந்தும், தொலைத்தும், தெருவில் திண்டாடிய அனுபவம், ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட அப்பாவி ஜீவன்களை உற்சாகப்படுத்துவதும், உய்விப்பதுவுமே நம் நோக்கம். சாவியின் சரித்திரப் புத்தகத்தில் நான் படித்த பக்கங்கள் சில:<br />
அனுபவம் 1<br />
அலுவலகத்தில் பணம் செலுத்த வந்த ஏஜன்ட் உடன் பேசிக் கொண்டிருந்தேன். உபசரிப்பில் உற்சாகமான ஏஜன்ட், ஒரு மணி நேரம் இருந்தபின் பிரியாவிடை கொடுத்துச்சென்றார். அவர் சென்ற சில மணி நேரம் ஆன பிறகே, மொபட் சாவி காணாமல் போயிருப்பது தெரிந்தது.<br />
‘யார் எடுத்திருப்பர்’ என்று யோசனையில் இருந்தபோதுதான், ‘சார், ஏஜன்ட் வெரல்ல சாவிய வெச்சு சுத்திட்டு இருந்தாரு சார்’ என்றான் ஆபீஸ் பையன், தயங்கியபடி. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஏஜன்ட் போனில் கிடைத்தார். ”சார், கையில வெச்சுட்டே இருந்த ஞாபகம். அப்புடியே வந்துட்டுது. ஊர்ல வந்து தான் தெரிஞ்சுது, சாவி நம்முளுது இல்லன்னு” என்று மென்று விழுங்கினார்.மறுநாள் டவுனுக்கு வந்த ஒருவரிடம் சாவியை கொடுத்து அனுப்பினார்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #373737; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 1.625em; outline: 0px; padding: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;">
அனுபவம் 2<br />
நிருபரான நண்பரின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு போயாக வேண்டும். அலுவலகத்தை பூட்ட தயாரான நேரத்தில் தன் மொபட் சாவியை தேட ஆரம்பித்தார் நண்பர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி நிகழ்ச்சிக்கு இருவரும் என் மொபட்டில் சென்றோம்.<br />
வழியெங்கும், ‘சாவிய யாரு எடுத்திருப்பாங்க’ என்ற யோசனையும், புலம்பலுமாகவே வந்தார் நண்பர். ‘யாரெல்லாம் ஆபீசுக்கு வந்தாங்க’ என்று லிஸ்ட் அவுட் செய்து புலன் விசாரணை நடத்தியதில், பத்திரிகைச்செய்தி கொடுக்க வந்திருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் மீது சந்தேகம் கிளப்பினார், சர்க்குலேசன் பிரிவு அலுவலர். ‘சேச்சே, அவர்ட்டப்போய் எப்புடி’ என கேட்கத் தயங்கினார் நண்பர். அதற்குள் அந்த தலைமை ஆசிரியரே அலுவலகத்துக்கு போன் செய்து விட்டார்.<br />
”சார், மறந்தாப்புல ஏதோ சாவிய எடுத்துட்டு வந்துட்டம்போல இருக்கு. உங்க ஆபீஸ் சாவியான்னு ஒரு சந்தேகம். அதான் போன் பண்ணிப் பாப்பமேன்னு” என்றார். நண்பர் பல்லைக் கடித்துக் கொண்டார்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #373737; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 1.625em; outline: 0px; padding: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;">
அனுபவம் 3<br />
இதுவும் அதே ஊரில் நடந்தது தான். நண்பரான உள்ளூர் ஏஜன்ட், தினமும் மாலை வேளைகளில் அலுவலகம் வந்து நாட்டு நடப்புகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார். அன்றும் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தார்.<br />
பேசி முடித்து, கிளம்பும் வேளையில், ‘வண்டி சாவிய எங்கியோ வெச்சுட்டனே’ என்று தேட ஆரம்பித்தார். வெளியில் சென்று மொபட்டில் பார்த்தார். அரை மணி நேரமாக தேடியும் சாவி கிடைத்தபாடில்லை.<br />
அப்போது தான், செய்தி கொடுப்பதற்காக வந்து சென்ற உள்ளூர் டிவி வீடியோகிராபர் ஞாபகம் வந்தது. சந்தேகத்தோடு தான் போன் செய்தேன். ”ஏப்பா எங்க ஆபீஸ்ல ஏதோ சாவிய காணங்கிறாங்க, நீ வந்தப்ப ஏதாவது பாத்தியா என்றேன். ”அண்ணே அது உங்க சாவியாண்ணே. ஏதுடா நம்மகிட்ட புதுசா ஒரு சாவி இருக்குதேன்னு எனக்கு அப்பவே சந்தேகம்ணே, ஒடனே கொண்டாரண்ணே” என்று வேகவேகமாக பேசியவர், முக்கால் மணி நேரத்துக்கு பிறகு வந்தார்.<br />
பொறுமையிழந்து, கால் மாற்றி கால் நின்று, சிகரெட்டுகள் சிலவற்றை ஊதி விட்டு, வெறுப்போடு இருந்த போட்டோகிராபரும், ஏஜன்டும், சாவியுடன் வந்தவரிடம், கடுபபைக்காட்டினர். வாக்குவாதம் முற்றியது.<br />
”உன் வண்டி சாவிய ஒர்த்தன் எட்த்திருந்தா சும்மார்ப்பியா’ என்ற போட்டோக்காரர், வந்தவர் வண்டியில் இருந்து சாவியை உருவி, கை போன போக்கில் வீச, அது அந்த வழியில் சென்று கொண்டிருந்த மினி பஸ்சின் கூரையில் விழ, ‘சாவி, சாவீ, நிர்த்து நிர்த்து’ என அவர் மினி பஸ்சை பார்த்து கூவிக்கொண்டே துரத்த… ஒரே களேபரம்.</div>
<div style="background-color: white; border: 0px; color: #373737; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 1.625em; outline: 0px; padding: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;">
இந்த மூன்று சம்பவங்களும் ஒரே ஊரில் ஒரு சில ஆண்டு இடைவெளியில் நடந்தவை. டேபிள் மீது இருக்கும் பொருளை எடுத்து கையில் வைத்திருப்பதும், அதை அப்படியே பாக்கெட்டில் வைத்துச் சென்று விடுவதும், ஒரு விதமான மறதிநோயின் வெளிப்பாடு.<br />
இந்த வியாதியின் பெயர் தமிழில் சாவியோபோவியா.<br />
ஆங்கிலத்தில் ‘கீயோ லவட்டிஸ்’ எனலாம். எந்த வயதினருக்கும் வரக்கூடிய இந்த வியாதிக்கு, தடுப்பூசிகளோ, மாத்திரை, மருந்துகளோ கிடையாது. தற்காப்பு மட்டுமே உங்கள் சாவியை காக்கும்; அவதியில் இருந்து உங்களையும் காக்கும். ஆகவே, அன்போடு நான் சொல்வதெல்லாம் ஒன்று மட்டும் தான். தம்பி…சாவி பத்திரம்!</div>
</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8324167229500376465.post-60811186487027023022013-12-14T03:07:00.002-08:002013-12-19T22:34:05.151-08:00அடிமையின் பலம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="background-color: white; border: 0px; color: #373737; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 15px; line-height: 24px; margin-bottom: 1.625em; outline: 0px; padding: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;">
காப்பிக்கோப்பையுடன்<br />
காலைத்துயில் எழுப்பும்<br />
கடைக்குட்டி பாப்பாவின்<br />
கற்பூரச்சிரிப்புக்கு<br />
காலமெல்லாம் நான் அடிமை!<br />
இரவுப்பொழுதினிலே<br />
எல்லோரும் உறங்குகையில்<br />
தான் மட்டும் விழித்திருந்து<br />
தந்தைக்கு பரிமாறும்<br />
தலைமகளே நான் அடிமை!<br />
நடுநிசி கடந்தாலும்<br />
கடும்பசியாய் இருந்தாலும்<br />
‘கணவன் உண்ணவில்லை<br />
கடுகளவும் பசியில்லை;<br />
காலை உண்டதெல்லாம்<br />
குரல்வளையில் உள்ளதென’<br />
இனிதே பொய் உரைக்கும்<br />
இல்லாளின் ‘இம்சை’க்கும் நான் அடிமை!<br />
‘பப்பாளிப்பழம் கொடுத்து<br />
பல நாட்கள் ஆனதடா<br />
பார்த்தாயா; உண்டாயா’<br />
எனக்கேட்பார் என் தந்தை!<br />
கொடுத்துச் சென்று விட்டால்<br />
கூடையிலே போட்டிடுவார் என்றெண்ணி<br />
கூடவே நின்றிருந்து<br />
புசிப்பதையும் பார்த்திடுவார்!<br />
நள்ளிரவு என்றாலும்<br />
நண்பகல் என்றாலும்<br />
நான் வந்து சேரும் வரை<br />
தான் துஞ்சா காத்திருக்கும்<br />
தந்தைக்கும் நான் அடிமை!<br />
இமை மூடா இரவுப்பணி<br />
சுமையாக இருந்தாலும்<br />
தமைக்காக்கும் தனயன்<br />
துஞ்சுகிறானென்று<br />
பகல்பொழுதில் விளையாடும்<br />
பக்கத்துச் சிறுவர்களை<br />
பார்வையிலே அதட்டும்<br />
பாசமிகு அன்னைக்கும் நான் அடிமை.<br />
‘பல நாளாய் பார்க்கலையே<br />
பசங்க படிப்பதெங்கே<br />
வேல வேலையின்னு<br />
வெய்யில்ல அலையாதே<br />
காசு பணமெல்லாம்<br />
தானாத்தேடி வரும்<br />
தாய் தகப்பனை பாத்துக்கடா’<br />
பாசமழை பொழியும்<br />
பண்பாளர் பேச்சுக்கும் நான் அடிமை!<br />
அவசரம் என்றழைத்தால்<br />
ஓடோடி வந்துதவும்<br />
உறவுக்கும் நான் அடிமை!<br />
வாழ்ந்திருப்போம் இப்படியே<br />
வாங்கி வந்த வரம் அப்படி!<br />
அடிமைக்குத் தானிருக்கும்<br />
ஆயிரம் பலவீனம்!<br />
அடியவன் பலமெல்லாம்<br />
அடிமையாய் இருப்பது தான்!<br />
காரணம் கூறணுமா;<br />
ஆம்! ஆயிரத்தில் நான் ஒருவன்!</div>
<div class="wpcnt" id="wordads-preview-parent" style="background-color: white; border: 0px; color: #373737; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 15px; line-height: 0; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">
<div class="wpa" style="border: 0px; display: inline-block; font-family: inherit; font-style: inherit; margin: 0px; max-width: 100%; outline: 0px; overflow: hidden; padding: 0px; position: relative; vertical-align: baseline;">
<br class="Apple-interchange-newline" /></div>
</div>
</div>
ஆறுமுகம் அய்யாசாமிhttp://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.com0