‘அரசியல் விஞ்ஞானி, அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் மிருகம்...’ என்கிறது, அவரது ட்விட்டர் தன் விவரக்குறிப்பு. அவர், யோகேந்திர யாதவ். டில்லித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, கெஜ்ரிவாலை தவிர்த்த பிற காரணங்களை பட்டியலிட்டுப் பாருங்கள்; அதில், முதலிடத்தில் யோகேந்திர யாதவ் பெயர் இருக்கும்.
தேர்தல் கணிப்பாளராக ஒரு காலத்தில், ‘டிவி’ அரங்குகளில், மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த தாடிக்காரர் யோகேந்திரா, ஹரியானா மாநிலம், குர்கானை சேர்ந்தவர்.
ஆம் ஆத்மியின் பின்னணியில் இவர் இருக்கும் விஷயத்தை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட முந்தைய காங்கிரஸ் அரசு, பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றியது.
அதைப்பற்றி கவலைப்படாத யோகேந்திரா, ஆம் ஆத்மியில் நீடித்தார். முந்தைய டில்லி சட்டசபை தேர்தலிலும், தொடர்ந்த லோக்சபா தேர்தலிலும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
குர்கான் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தாலும், தேர்தல் அரசியலில் இருந்து அவர், ஓடிவிடவில்லை. மீண்டும் டில்லி தேர்தலுக்கான திட்டமிடுதலில் களம் இறங்கினார்.
ஒரு சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்று வெளியான செய்திகளைப் பற்றிக்கூறிய அவர், ‘கருத்துக் கணிப்புகள் கூறும் இடங்களைக் காட்டிலும், எங்கள் கட்சி அதிக இடங்கள் பிடிக்கும். 57 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார். இப்போது வெளியாகி வரும் முடிவுகளைப் பார்த்தால், கணிப்பாளரின் கணக்கு பலித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!
தேர்தல் கணிப்பாளராக ஒரு காலத்தில், ‘டிவி’ அரங்குகளில், மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த தாடிக்காரர் யோகேந்திரா, ஹரியானா மாநிலம், குர்கானை சேர்ந்தவர்.
ஆம் ஆத்மியின் பின்னணியில் இவர் இருக்கும் விஷயத்தை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட முந்தைய காங்கிரஸ் அரசு, பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றியது.
அதைப்பற்றி கவலைப்படாத யோகேந்திரா, ஆம் ஆத்மியில் நீடித்தார். முந்தைய டில்லி சட்டசபை தேர்தலிலும், தொடர்ந்த லோக்சபா தேர்தலிலும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
குர்கான் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தாலும், தேர்தல் அரசியலில் இருந்து அவர், ஓடிவிடவில்லை. மீண்டும் டில்லி தேர்தலுக்கான திட்டமிடுதலில் களம் இறங்கினார்.
ஒரு சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்று வெளியான செய்திகளைப் பற்றிக்கூறிய அவர், ‘கருத்துக் கணிப்புகள் கூறும் இடங்களைக் காட்டிலும், எங்கள் கட்சி அதிக இடங்கள் பிடிக்கும். 57 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார். இப்போது வெளியாகி வரும் முடிவுகளைப் பார்த்தால், கணிப்பாளரின் கணக்கு பலித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!