புதன், 13 ஜனவரி, 2016

இது, வாழைப்பழ தேசம்!

நீதிமன்ற தீர்ப்பு முக்கியமா, மக்கள் உணர்வு முக்கியமா என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ‘மக்கள் எல்லோரும் சரியானவர்களாக இருந்தால், நீதிமன்றங்களே தேவையில்லையே’ என்று கேட்பதற்கு யாருக்கும் துப்பில்லாத இந்த துர்ப்பாக்கிய சூழலில், இந்தச்சமூகம் அது பற்றி கருத்துச் சொல்வது மிக அவசியமாகிறது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத் தீர்ப்புகளை, கர்நாடகா அரசு மதிப்பதில்லை. பெரியாறு அணை தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை, கேரளா பின்பற்றுவதில்லை. இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போதெல்லாம், ‘நீதிமன்ற உத்தரவை, அந்த மாநிலம் மதிப்பதில்லை’ என்று, தமிழகத் தரப்பில் வாதம் முன் வைக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.
‘எங்கள் மாநில விவசாயிகள் உணர்வுக்கு மதிப்பளித்து, காவிரியில் தண்ணீர் திறந்து விட மாட்டோம்’ என்று, கர்நாடக அரசு கூறிவிட்டால், நமது நிலை என்னவாக இருக்கும்? ஏற்கனவே, கர்நாடகா அரசு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. வெளிப்படையாக சொல்லும் நிலை வந்தால் என்ன செய்வது?
பெரியாறு அணை விவகாரத்தில், எங்கள் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, புது அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் நிலையாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக, சட்டமன்றத்தை கூட்டி, புதிய சட்டத்தை நிறைவேற்றிய ‘பெருமை’ அம்மாநிலத்துக்கு உண்டு.
இப்படி பிரச்னைகள் வரும்போதெல்லாம், அபயக்குரல் எழுப்பிய தமிழர்கள், இப்போது மட்டும், ‘மக்கள் உணர்வுதான் முக்கியம்’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பதை, என்னவென்று சொல்வது?
‘நாட்டில் எந்த மாநில அரசும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லை; ஆகவே நாங்களும் மதிக்க மாட்டோம்’ என்று சொல்லி விட்டால், வாதம் கொஞ்சம் எடுபடுவது போலிருக்கும்; அப்புறம், கோர்ட்டில் நாயடி பேயடி கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்!

6 கருத்துகள்:

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாவாணன் ஐயா. தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. அரசியல்வியாதிகளின் ஜனநாயக உரிமை ,மக்களின் உணர்வு ஆகிய இரண்டையும் விட நீதிதான் உயர்ந்தது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பகவான்ஜி சார். இந்த நாட்டில் மிச்சம் மீதம் இருக்கும் நம்பிக்கைகளை கொஞ்சமாவது காப்பாற்றி வருபவை நீதிமன்றங்கள்தான். ஆகவே, ஒரு சில தவறுகள் இருந்தாலும், நீதிமன்றம் சொல்வதை கேட்பதுதான், நாட்டுக்கு நல்லதாக இருக்கும் என்பதே நம் கருத்து. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      நீக்கு
  3. பகவான்ஜீ, சொன்னதே மிகவும் சரியானது.
    அதுவும் ஒரு லுசுத்தனமான ஜல்லிக்கட்டுக்கா நீங்க இப்படி சொல்லலாமா.
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா. வருத்தத்தில் சொன்னதுதான் ஐயா.

      நீக்கு